பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 401 

என்றுரைத்து; அணங்கின் அன்னாள் - தெய்வப் பெண் போன்றவள்; அலைகடல் புலம்பின் ஓவாது அரற்றும் - அலைகடலொலி போல இடைவிடாமல் அரற்றுவாளாயினள்.

 

   (வி - ம்.) 'சிலைவலாய்!' எனவே இத் துன்பம் நீக்குதற்குரியாய் என்றாள். உருவு வெளிப்படுதலிற் புல்லென்றாள். சீவகசாமியோ : சேய்மை விளி. ஓ: இரக்கக் குறிப்பும் ஆம்.1.

 

   கண்களால் முலையினில் எழுதுதலாவது - அவையிற்றின் எழிலைக் கண்ணாலே நெடிது கூர்ந்து நோக்கி இன்புறுதல். முள்கும் - தழுவும்.

( 195 )
688 பிறனல மரற்றக் கேட்டும்
  பீடினாற் கனிந்த காம
நறுமல ரணிந்த மாலை
  நாற்றக்கோர் நான்கு காதம்
உறநடந் தறித லில்லா
  னொண்டொடிக் குருகிப் பின்னுந்
திறனல தமர்க்குச் செப்புந்
  தீயுமிழ்ந் திலங்கும் வேலான்.

   (இ - ள்.) தீ உமிழ்ந்து இலங்கும் வேலான் - அனல் சொரிந்து விளங்கும் வேலானும்; பீடினால் கனிந்த காம நறுமலர் அணிந்த மாலை நாற்றக்கு - பெருமையாற் பழுத்த காமமாகிய நறுமலராலே புனையப் பெற்ற மாலையினது மணத்திற்கு; ஓர் நான்கு காதம்உற நடந்து அறிதல் இல்லான் - ஒரு நான்கு காத வழியளவும் பொருந்த நடந்தறியாதவனும் ஆகிய கட்டியங்காரன்; பிறன் நலம் அரற்றக் கேட்டும் - வேறொருவன் அழகை எடுத்துக்கூறிப் புலம்புவது கேட்டும்; பின்னும் ஒண்தொடிக்கு உருகி - மேலும் அவ்வொள்ளிய தொடியாளை நினைந்து உருகி; தமர்க்குத் திறன் அலசெப்பும் - தன் அமைச்சரிடம் தகவற்ற மொழிகளைசக் கூறுகிறான்.

 

   (வி - ம்.) காமநெறியறியாதவன் என்பது கருத்து. மாலை: காமமென் மாலை. அன்றி, அனங்கமாலையும் ஆம்.

( 196 )

1. இதற்குப் பின்னர்ச் சில ஏட்டுப் பிரதிகளில் உள்ள செய்யுள்:-

 

”இந்நகர் தனக்கு மன்னன் யாரெனக் கியம்பு மாதே

 

மன்னிய வணிகன் மைந்தன் சீவகன் தானோ என்னே

 

உன்னிய நெஞ்சுங் கண்ணும் ஒருங்குடன் அவனுக் கானாய்

 

என்னை நீ மனத்துள் வையாக் காரணம் யாதோ என்றான்.”