காந்தருவ தத்தையார் இலம்பகம் |
402 |
|
வேறு
|
|
689 |
விலங்க லன்ன வேக வேழ |
|
நான்கும் வெல்லு மாற்றலன் |
|
கலங்க லந்தி லங்கு மார்பிற் |
|
கந்து கன்ம கன்னென |
|
நலங்க லந்து ரைக்கு மாலிந் |
|
நன்ன கர்க்கு மன்னனோ |
|
வுலங்க லந்த தோளினீரு |
|
ரைமி னீவி ரென்னவே. |
|
(இ - ள்.) உலம் கலந்த தோளினீர் - கற்றூணின் திண்மை கலந்த தோளையுடையீர்!; கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் - பூண் கலந்து விளங்கும் மார்பையுடைய கந்துகன் சிறுவன்; விலங்கல் அன்ன வேக வேழம் நான்கும் வெல்லும் ஆற்றலன் என - மலையனைய விரையும் திசைக்களிறுகள் நான்கையும் வெல்லும் வலிமையுடையான் என்று; நலம் கலந்து உரைக்கும் - உலகம் அவனுடைய தகவைக் கூறும்; இந் நல் நகர்க்கு மன்னனோ - இந்த அழகிய நகருக்கு அவன் அரசனோ?; நீவிர் உரைமின் என்ன - நீங்கள் உரைப்பீராக என்று வினவ,
|
|
(வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.
|
|
உரைக்கும் என்னும் பயனிலைக்கு உலகம் என்னும் எழுவாய் வருவித்தோதுக; மார்பின் மகன் கந்துகன் மகன் எனத் தனித் தனிக் கூட்டுக.
|
( 197 ) |
690 |
மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர் |
|
தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினா |
|
னொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை |
|
விட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான். |
|
(இ - ள்.) மட்டு அவிழ்ந்த தாரினான் - தேன் விரிந்த மாலையினான்; இம் மா நகர்க்குள் ஆயிரர்தொட்டு எடுக்கலா உலம் - இப் பெரு நகரிலே ஆயிரவர் தீண்டியெடுக்க இயலாத கல்லுருண்டையை; ஓர் தோளின் ஏந்தி ஆடினான் - ஒரு தோளிலே ஏந்தி ஆடினான்; ஓர் இரண்டு நாகம் எடுக்கலாத கல்லினை - இரண்டு களிறுகள் எடுக்க முடியாத கல்லை; ஒட்டி விட்டு அலர்ந்த போதுபோல - சூளுரைத்து முறுக்கலர்ந்த மலர் போல (எளிதாக), ஏந்தல் ஏந்தி நீக்கினான் - அச் சிறப்புடையான் எடுத்து எறிந்தான்.
|
|