பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 404 

   என்னும் அறத்தினை அமைச்சர் கட்டியங்காரனுக்குக் குறிப்பாற் கூற முயறலை உணரலாம். மேலும் அமைச்சர் முதலியோர் அவனை உள்ளத்தே வெறுத்துப் புறமே நட்டொழுகுதலையும் உணரலாம்.

( 200 )
693 இன்ன னென்ன வின்பு றானிழந்த னன்ன ரசென
வென்னை வெளவு வாயில்தா னென்னுஞ் சூழ்ச்சி தன்னுளா
னன்ன தால ரிறப வறிந்து கூத்தி கூறினா
ளின்ன தாற்ப டையமைத் தெழுமி னென்றி யம்பினான்.

   (இ - ள்.) இன்னன் என்ன இன்பு உறான் - இத் தன்மையன் என்று அமைச்சர் கூறவும் மகிழா தவனாய்; அரசு இழந்தனன் என - இனி நான் அரசிழந்தேன் என்று உட்கொண்டு; வெளவும் வாயில்தான் என்னை என்னும் - சீவகனை அகப்படுக்கும் வழிதான் என்னையோ என்கிற; சூழ்ச்சி தன்னுளான் - சூழ்ச்சியிலே இருக்கிறான்; அன்னது ஆதல் - அவன் கருத்து அவ்வாறு இருத்தலை; அரில்தப அறிந்து கூத்தி கூறினாள் - குற்றமின்றி அறிந்து நாகமாலை கூறினாள்; இன்ன தால் - இப்படியிருப்ப தால்; படை அமைத்து நீவிர் எழுமின் என்று இயம்பினான் - நீங்கள் படை திரட்டி எழுவீர்களாக என்று கந்துகன் கூறினான்.

 

   (வி - ம்.) [நச்சினார்க்கினியர், 'சூழ்ச்சி தன்னுளான்' என்பதன் பின் 'இதுபட்டது என்றாள்' என்று, 670-71-ஆம் செய்யுளில் உள்ள சொற்களைக் கொணர்ந்து கூட்டி இச் செய்தியை ஓலை கொண்டு வந்தவள் கூற்றாக்குவர். அதற்காக 667 முதல் 693 வரை ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டுவர். அது பொருத்தமன் றென்பதை முன்னர் 671 ஆம் செய்யுளில் உரைத்தாம்.]

( 201 )

வேறு

 
694 தாதைதா னுரைத்த வெல்லாந்
  தன்னுயிர்த் தோழன் கூறக்
கோதைமுத் தணிந்த மார்பன்
  கூரெயி றிலங்க நக்காங்
கேதமொன் றில்லை சேறு
  மென்றலு மிலங்கு வாட்கைப்
போதுலாங் கண்ணி மைந்தர்
  போர்ப்புலிக் குழாத்திற் சூழ்ந்தார்.

   (இ - ள்.) தாதைதான் உரைத்த எல்லாம் - கந்துகன் கூறிய எல்லாவற்றையும்; தன் உயிர்த் தோழன் கூற - அவன் உயிர் நண்பன் உரைக்க; கோதை முத்து அணிந்த மார்பன் - பூமாலையும் முத்துமாலையும் அணிந்த மார்பனான சீவகன்; கூர்