காந்தருவ தத்தையார் இலம்பகம் |
409 |
|
விடுகணை: வினைத்தொகை. இவுளி - குதிரை. காலியல்புரவி - காற்றை ஒத்த குதிரை. அடுதிரை - கரையை மோதும் அலையையுடைய கடல்: அன்மொழி. நகர் - மண்டபம்.
|
( 209 ) |
702 |
தோற்றனண் மடந்தை நல்யாழ் |
|
தோன்றலுக் கென்று நிற்பார் |
|
நோற்றன ணங்கை மைந்த |
|
னிளநல னுகர்தற் கென்பார் |
|
கோற்றொடி மகளிர் செம்பொற் |
|
கோதையுங் குழையு மின்ன |
|
வேற்றன சொல்லி நிற்பா |
|
ரெங்கணு மாயி னாரே. |
|
(இ - ள்.) கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன - திரண்ட வளையல்களையுடைய மங்கையர் பொன் மாலையும் குழையும் மின்னுமாறு (வந்து); தொன்றலுக்கு மடந்தை நல்யாழ் தோற்றனள் என்று நிற்பார் - சீவகனுக்குத் தத்தை நல்ல யாழிலே தோற்றாள் என்று நிற்பாரும்; மைந்தன் இளநலம் நுகர்தற்கு நங்கை நோற்றனள் என்பார் - சீவகனுடைய இளமையின்பத்தை நுகரத் தத்தை நோற்றாள் என்பாரும்; ஏற்றன சொல்லி நிற்பார் - (இவைபோல மேலும்) பொருந்துவன புகன்று நிற்பாருமாக; எங்கணும் ஆயினார் - எவ்விடத்தும் நிறைந்தனர்.
|
|
(வி - ம்.) இவன் கல்வி உணர்தலின் தெளிவு பற்றித், 'தோற்றனள்' என்று இறந்த காலத்தாற் கூறினர்.
|
( 210 ) |
வேறு
|
|
703 |
சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைத்தர |
|
வறாம லர்ததே ரியலா னழன்று நோக்கி யையெனப் |
|
பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினா |
|
லறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே. |
|
(இ - ள்.) சுறாநிறக் கொடுங்குழை சுழன்று எருத்து அலைத்தர - மகர வடிவமான, நிறமுடைய, வளைந்த குழை சுழன்று பிடரிலே அலைக்க; அறா மலர்த் தெரியலான் - மணம் நீங்காத மலர்மாலையானான கட்டியங்காரன்; அழன்று நோக்கி ஐ என - எரிவுடன் பார்த்து வியப்புற; பொறாமனம் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு என்னும் மணிக்கைப் பிடியுடைய குதிரைச் சவுக்காலே; அறாவி - அடித்து; அனங்கன் அன்ன அண்ணல் வந்து தோன்றினான் - காமனையனைய காளை வந்து தோன்றினான்.
|
|