| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
409  | 
  | 
| 
    விடுகணை: வினைத்தொகை. இவுளி - குதிரை. காலியல்புரவி - காற்றை ஒத்த குதிரை. அடுதிரை - கரையை மோதும் அலையையுடைய கடல்: அன்மொழி. நகர் - மண்டபம். 
 | 
( 209 ) | 
|  702 | 
தோற்றனண் மடந்தை நல்யாழ் |  
|   | 
  தோன்றலுக் கென்று நிற்பார் |  
|   | 
நோற்றன ணங்கை மைந்த |  
|   | 
  னிளநல னுகர்தற் கென்பார் |  
|   | 
கோற்றொடி மகளிர் செம்பொற் |  
|   | 
  கோதையுங் குழையு மின்ன |  
|   | 
வேற்றன சொல்லி நிற்பா |  
|   | 
  ரெங்கணு மாயி னாரே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன - திரண்ட வளையல்களையுடைய மங்கையர் பொன் மாலையும் குழையும் மின்னுமாறு (வந்து); தொன்றலுக்கு மடந்தை நல்யாழ் தோற்றனள் என்று நிற்பார் - சீவகனுக்குத் தத்தை நல்ல யாழிலே தோற்றாள் என்று நிற்பாரும்; மைந்தன் இளநலம் நுகர்தற்கு நங்கை நோற்றனள் என்பார் - சீவகனுடைய இளமையின்பத்தை நுகரத் தத்தை நோற்றாள் என்பாரும்; ஏற்றன சொல்லி நிற்பார் - (இவைபோல மேலும்) பொருந்துவன புகன்று நிற்பாருமாக; எங்கணும் ஆயினார் - எவ்விடத்தும் நிறைந்தனர். 
 | 
  | 
| 
    (வி - ம்.) இவன் கல்வி உணர்தலின் தெளிவு பற்றித், 'தோற்றனள்' என்று இறந்த காலத்தாற் கூறினர். 
 | 
( 210 ) | 
வேறு
 | 
  | 
|  703 | 
சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைத்தர |  
|   | 
வறாம லர்ததே ரியலா னழன்று நோக்கி யையெனப் |  
|   | 
பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினா |  
|   | 
லறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) சுறாநிறக் கொடுங்குழை சுழன்று எருத்து அலைத்தர - மகர வடிவமான, நிறமுடைய, வளைந்த குழை சுழன்று பிடரிலே அலைக்க; அறா மலர்த் தெரியலான் - மணம் நீங்காத மலர்மாலையானான கட்டியங்காரன்; அழன்று நோக்கி ஐ என - எரிவுடன் பார்த்து வியப்புற; பொறாமனம் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு என்னும் மணிக்கைப் பிடியுடைய குதிரைச் சவுக்காலே; அறாவி - அடித்து; அனங்கன் அன்ன அண்ணல் வந்து தோன்றினான் - காமனையனைய காளை வந்து தோன்றினான். 
 | 
  |