பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 413 

வேறு

 
710 குட்டநீர்க் குவளை யெல்லாங்
  கூடிமுன் னிற்க லாற்றாக்
கட்டழ கமைந்த கண்ணா
  ணிறையெனுஞ் சிறையைக் கைபோ
யிட்டநாண் வேலி யுந்திக்
  கடலென வெழுந்த வேட்கை
விட்டெரி கொளுவ நின்றா
  ளெரியுறு மெழுகி னின்றாள்.

   (இ - ள்.) குட்டம்நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக் கட்டழகு அமைந்த கண்ணாள் - அழமான நீரிலுள்ள குவளை மலர்கள் எல்லாம் கூடினாலும் முன் நிற்க இயலாத பேரழகுடைய கண்ணினாளாகிய தத்தை; நிறை எனும் சிறையைக் கைபோய் - நிறை என்னும் காவலைக் கடந்து; இட்ட நாண்வேலி உந்தி - இடப்பட்டிருந்த நாணாகிய வேலியை நீக்கி; கடல் என எழுந்த வேட்கை - கடல்போல எழுந்த வேட்கையாகிய; எரிவிட்டு கொளுவ நின்றாள் - எரி கொழுந்துவிட்டுப் பற்றிக் கொள்ள நின்றவள்; எரியுறும் மெழுகின் நின்றாள்- தீயில் உற்ற மெழுகைப் போல நின்றாள்.

 

   (வி - ம்.) அவள் உள்ளம் சோர்ந்ததற்கு எரியுறும் மெழுகு உவமம். இது 1.கைம்மிகல் என்னும் மெய்ப்பாடு. கண்ணாள் வேட்கைஎரி கொளுவ அவ்வெரியுறு மெழுகின் நின்றாள் என்க.

( 218 )
711 நலத்தைமத் தாக நாட்டி நல்வலி யிளமை வாராக்
குலப்பிறப் பொன்னுங் கையாற் கோலப்பா சங்கொ ளுத்திக்
கலக்கியின் காமம் பொங்கக் கடைந்திடு கின்ற காளை
யிலைப்பொலி யலங்கன் மார்ப மியைவதென் றாகுங் கொல்லோ.

   (இ - ள்.) நலத்தை மத்தாக நாட்டி - இயற்கை அழகைமத்தாக நிறுத்தி; நல்வலி இளமை வார்ஆ - நல்ல வலிமையும் இளமையும் அம் மத்தின் இருபக்கமும் பூட்டும் கயிறுகளாகக் கொண்டு; குலப்பிறப்பு என்னும் கையால் - தாய்மரபு தந்தைமரபு ஆகிய இரு கைகளினால்; கோலப் பாசம் கொளுத்தி - செயற்கை அழகாகிய கடைகயிற்றை அம் மத்திலே பூட்டி; இன்காமம் பொங்கக் கலக்கி - இனிய காமம் என்னும் கடல் பொங்கு

 

1. கைம்மிகல் - ஒழுக்கக் கேடு. அது சாதித் தருமத்தை நீங்கினமை தன் உள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல் (தொல். மெய்ப். 12. பேர்.) இங்கு வரும் மெய்ப்பாடெல்லாம் தொல். மெய்ப். 12 -13-இல் கூறப்பட்டவை.