(வி - ம்.) இவள் விஞ்சையர் மகளாதலின் தன் மனக்கண்ணால் இவனை அறிந்தாள். எனவே, 'கண் வலையினும் கையினும் அகப்பட்டான்' என்றாள். தன் மேல் அவனுக்கு வேட்கை நிகழாததால், 'பெண்ணெனும் உழலை பாயும்' என்றாள். 'யாவனாங்கொல்' - இது 1.ஐயம் என்னும் மெய்ப்பாடு. 'சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப - இழிந்தழியிழிபே சுட்ட லான' (தொல். களவு -3) என்பதனால், தலைவிக்கு ஐயம் நிகழாதேனும், ஈண்டுக் களவன்மையானும் தன் மனக்கண்ணால் ஐயந்தீர்தல் வன்மையானும் ஐயம் நிகழ்ந்தது. மக்களால் தன்னை வருத்தலாகாமை முன்னே காண்டலின், 'என்னை இவ் வருத்தத்திலே அகப்படுத்தின ஏந்தல்' என்றாள்.
|
( 221 ) |