| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
433 |
|
|
(இ - ள்.) வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர் - இமயமலை அனைய சிறப்புற்ற அரச மரபுக்குக் குற்ற முண்டாக்கினீர்; விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் - ஞாயிற்றின் ஒளிக்கு முன்னர் மின்மினி ஒளி போன்றீர்; வாள் அமர் அஞ்சினீரேல் - வாட்போருக்கு அஞ்சினீரெனின்; வடுஉரை என்று மாயும் - பழிச்சொல் எப்போது மறையும்; அளியிர் முடிதுறந்து போகி முனிவனம் புகுமின் என்றான் - இரங்கத் தகுந்த நீவிர் அரசை விடுத்துச் சென்று முனிவர் தவவனத்தை யடைந்து தவம புரிவீராக என்றான்.
|
|
|
(வி - ம்.) 'வணிகன் மகளை அரசன் மணம் புரிவது தகும்; அரசன் மகளை வணிகன் புரிதல் மாசுடைத்து' என்னும் வழக்குப்பற்றி 'மாசு செய்தீர்' என்றான்.
|
|
|
எவற்றினும் உயர்ந்து திகழுவது நம்மரசகுலம் என்பான் 'வடதிசைக்குன்றம் அன்ன வான்குலம்' என்றான்.
|
|
|
இனி, இச்சீவகன் ஒளியே உலகெலாம் பரவ நும்மொளி மழுங்கும் என்பான், 'விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்' என்றான்.
|
|
|
இனி இப்பழிப்பட்ட நுமக்கிவ்வுலகில் இன்பமும் இல்லை என்பான் 'முனிவனம் புகுமின்' என்றான்.
|
( 250 ) |
| 743 |
மல்லுப்பூத் தகன்ற மார்பீர் |
| |
புகழெனும் போர்வை போர்த்துச் |
| |
செல்வப்பூ மகளு நாளை |
| |
அவனுழைச் செல்லு மென்றான். |
| |
முல்லைப்பூம் பந்து தன்னை |
| |
மும்மதக் களிற்று வேலிக் |
| |
கொல்லைப்பூங் குன்றஞ் செய்தீர் |
| |
குங்குமக் குழங்கன் மாலை |
|
|
(இ - ள்.) மல்லுப் பூத்து அகன்ற குங்குமக் குழங்கல் மாலை மார்பீர்! - மற்போரில் மலர்ந்தகன்ற, குங்குமமுடைய மணமுறுமாலை யணிந்த மார்பீர்!; முல்லைப் பூம்பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக் கொல்லைப் பூங்குன்றம் செய்தீர்! - முல்லை மலர்ப் பந்தை (கையாற் கசக்கி யெறியாமல்) மும்மதக்களிற்றை வேலியாகவுடைய காட்டிலே அழகிய மலையாக ஆக்கிவிட்டீர்; செல்வப் பூமகளும் புகழெனும் போர்வை போர்த்து - செல்வத் திருமகளும் புகழாகிய போர்வையைப் போர்த்து; நாளை அவனுழைச் செல்லும் என்றான் - நாளைக்கு அவனிடம் செல்வாள் என்றான்.
|
|