பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 434 

   (வி - ம்.) நீர் போருக் கஞ்சிக் கலுழ வேகன் மகளைக் கொடுத்தலின், யான் நினைத்த அளவாய் என்கீழ் வாழ்வானை எனக்கு நிலை குலைத்தல் அரிதாக்கினீர் என்றான்.

 

   முல்லைப் பூப்பந்தென்றான் இப்பொழுதே அவனை வெல்லுதல் எளிது என்பது தோன்ற. 'மல்லுப்பூத்தகன்ற மார்பீர்' என்றான், நும் வலிமையையும் நீயிர் இப்போது நினைந்து கொண்மின் என்பது தோன்ற. இதனால் அரசருடைய சினத்தைத் தூண்டுகின்றான்.

( 251 )
744 திருமக ளிவளைச் சோ்ந்தான் றெண்டிரை யாடை வேலி
யிருநில மகட்குஞ் செம்பொ னேமிக்கு மிறைவ னாகுஞ்
செருநிலத் திவனை வென்றீர் திருவினுக் குரியீ ரென்றான்
கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் கார னன்றே.

   (இ - ள்.) கருமனம் நஞ்சு வெஞ்சொல் கட்டியங்காரன் - கொடிய மனத்தினையும் நஞ்சு கலந்த கொடிய சொல்லையும் உடைய கட்டியங்காரன்; திருமகள் இவளைச் சேர்ந்தான் - திருமகளாகிய இவளை அடைந்தவன்; தெண் திரை ஆடை வேலி இருநில மகட்கும் செம்பொன் நேமிக்கும் - தௌ்ளிய அலைகடலை ஆடையாகவும் வேலியாகவும் உடைய பெருநில மகளுக்கும் செம்பொன் கொண்ட சக்கரவாளகிரிக்கும்; இறைவன் ஆகும் - அரசன் ஆவான்; செருநிலத்து இவனை வென்றீர் - (ஆகையால்) போர்க்களத்தே இவனை வென்றீரெனின்; திருவினுக்கு உரியீர் என்றான் - (முதற்கூறிய) செல்வத்துக்கு உரியீராவீர் என்றான்.

 

   (வி - ம்.) நல்லிலக்கணமுழுதும் அமைந்த இவளை எய்தினோர் எல்லாச் செல்வமும் எய்துதல் ஒருதலை என்பான், ”திருமகள் இவளைச் சேர்ந்தான் நிலமகட்கும் நேமிக்கும் இறைவன் ஆகும்” என்றான். நேமி. சக்கரவாளகிரி; என்றது தேவருலகிற்கும் என்றவாறு. இதனால் அரசருடைய ஆசையைத் தூண்டுகின்றான்.

( 252 )
745 அனிச்சப்பூங் கோதை சூட்டி
  னம்மனை யோவென் றஞ்சிப்
பனிக்குநுண் ணுசுப்பிற் பாவை
  யொருத்திநாம் பலரென் றெண்ணித்
துனித்துநீர் துளங்கல் வேண்டா
  தூமணிச் சிவிறி நீர்தூய்த்
தனிக்கயத் துழக்கி வென்றீர்
  தையலைச் சார்மின் என்றான்.

   (இ - ள்.) அனிச்சப் பூங்கோதை சூட்டின் - அனிச்ச மலர்மாலையைச் சூட்டினும்; அம்மனையோ! என்று அஞ்சிப் பனிக்கும் - அம்மாவோ! என்று அச்சமுற்று நடுங்கும்; நுண்