| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
439 |
|
|
அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ? - கொள்வதற்கு வருந்திப் போவதை யன்றித் தழுவுதல் உங்களுக்கு இயலுமோ?
|
|
|
(வி - ம்.) ஏறுபோல் எருது நுகராமையின், அதனோடு அரசரை உவமித்தான்.
|
|
|
இனம் என்றது பதுமுகன் முதலியோரை. உழப்பெருது - உழுதிளைத்த காளை.
|
( 259 ) |
| 752 |
எழுந்துவிண் படருஞ் சிங்கம் |
| |
பெட்டைமே லிவர்ந்து நின்றான் |
| |
மழுங்கமேற் சென்று பாய்தன் |
| |
மறப்புலி தனக்கு மாமோ |
| |
கொழுங்கயற் கண்ணி னாளைச் |
| |
சீவக குமரன் சூழ்ந்தா |
| |
லழுங்கச்சென் றணைதல் பேய்காள் |
| |
அனங்கற்கு மாவ துண்டே. |
|
|
(இ - ள்.) எழுந்து விண்படரும் சிங்கம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால் - எழுந்து விண்ணிற் படரும் சிங்கம் பெட்டையை விரும்பி நின்றால்; மேற்சென்று மழுங்கப் பாய்தல் மறப்புலி தனக்கும் ஆமோ?- மேலே சென்று அது கெடுமாறு பாய்தல் வீரப்புலிக்கும் இயலுமோ?; கொழுங்கயல் கண்ணினாளைச் சீவக குமரன் சூழ்ந்தால் - வளமுறுங் கயற் கண்ணாளைச் சீவகன் தழுவி நின்றால்; பேய்காள்! அழுங்கச் சென்று அணைதல் அனங்கற்கும் ஆவது உண்டே? - பேய்களே! சீவகன் வருந்தச் சென்று தழுவுதல் காமனுக்கும் ஆவதொரு காரியம் இல்லை.
|
|
|
(வி - ம்.) உழப் பெருது என வெறுக்கக் கூறியவன் புலி என உயர்த்துக் கூறி அவ்விதமேனும் விடுவித்தல் அரிது என்றான். 'ஒட்டகம் குதிரை கழுதை மரை யிவை - பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய' (தொல் - மரபு - 52) என்பதனுள், 'கொடை' என்றதனாற் சிங்கத்திற்கும் பெட்டை கொள்க. தண்டித்து விடுக்க வேண்டுதலின், 'பேய்காள்' என்றான்.
|
( 260 ) |
| 753 |
மத்திரிப் புடைய நாகம் |
| |
வாய்வழி கடாத்த தாகி |
| |
யுத்தமப் பிடிக்க ணின்றா |
| |
லுடற்றுதல் களபக் காமே |
| |
பத்தினிப் பாவை நம்பி |
| |
சீவகன் பால ளானா |
| |
லத்திறங் கருதி யூக்க |
| |
லரசிர்கா ணுங்கட் காமோ. |
|