| காந்தருவ தத்தையார் இலம்பகம் | 
440  | 
  | 
| 
    (இ - ள்.) மத்திரிப்பு உடைய நாகம் வாய்வழி கடாத்தது ஆகி உத்தமப் பிடிக்கண் நின்றால் - செற்றமுடைய களிறு மிகுந்து பொழியும் மதமுடையதாகி நல்லிலக்கணப் பிடியினிடம் நின்றால்; களபக்கு உடற்றுதல் ஆமே? - யானைக் கன்றிற்கு அதனைக் கெடுத்தல் இயலுமோ?; பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால் - கற்புறு நங்கை தத்தை நம்பியாகிய சீவகனுக்குரியள், எனின்; அரசிர்காள்! அத்திறம் கருதி ஊக்கல் நுங்கட்கு ஆமோ? - அரசர்களே! அவளைப் பெறுந் திறத்தை நீர் கருதி முயறல் நுமக்குக் கூடுமோ? 
 | 
  | 
| 
    (வி - ம்.) அரசராயினும் கலைகளாலும் ஆண்மை முதலியவற்றாலுங் குறைபாடு உடைமையிற் பெறுதல் அரிது என்றான். 
 | 
  | 
| 
    மத்திரிப்பு - சினம். நாகம் - யானை. களபக்கு - யானைக்கன்றிற்கு; களபத்திற்கு எனற்பாலது சாரியை பெறாது உருபு புணர்ந்து இங்ஙனம் நின்றது. 
 | 
( 261 ) | 
|  754 | 
தூமத்தாற் கெழீஇய கோதை |  
|   | 
  தோட்டுணை பிரித்தல் விண்மேற் |  
|   | 
றாமத்தாற் கெழீஇய மார்ப |  
|   | 
  னிந்திரன் றனக்கும் ஆகா |  
|   | 
தேமுற்றீ ரின்னும் கேண்மி |  
|   | 
  னிரதியைப் புணர்து மென்று |  
|   | 
காமத்தாற் கெழுமி னார்க்குக் |  
|   | 
  காமனிற் பிரிக்க லாமே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தூமத்தால் கெழீஇய கோதை தோள்துணை பிரித்தல் - அகிற்புகை கழுமிய கோதையாளின் தோளின் துணையாகிய சீவகனைப் பிரித்தல்; விண்மேல் தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது - வானுலகிற் கற்பக மலர் பொருந்திய மார்பன் இந்திரனுக்கும் இயலாது; ஏம் உற்றீர்! இன்னும் கேண்மின்! - மயக்கமுற்றவர்களே! இன்னும் கேளுங்கள்!; இரதியைப் புணர்தும் என்று காமத்தால் கெழுமினார்க்கு - இரதியைக் கூடுவோம் என்று காமத்தினாற் பொருந்தினவர்கட்டு; காமனின் பிரிக்கல் ஆமே - காமனிடமிருந்து அவளைப் பிரித்தல் கூடுமோ? 
 | 
  | 
| 
    (வி - ம்.) வானவனாலும் சீவகனைப் பிரித்தல் அரிதென்று கூறிப் பின் இவளைப் பிரித்தலும் அரிது என்றான். இவை ஐந்து செய்யுளும் பேதம்.ஏமுற்றீர் - மயக்கங்கொண்டீர். 
 | 
( 262 ) |