| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
442 |
|
|
எய்திட்டு - அது கல் திரளைக் கழிந்து மண்ணிலே மறைய எய்து காட்டி; எமர் கல்வி இற்று என்றான் - எங்கள் கல்வியெல்லாம் இத்தகையது என்றான்.
|
|
|
(வி - ம்.) அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதுபற்றி எம்மாற்றல் இற்று என்று கண் கூடாக் காட்டினன் என்பது கருத்து.
|
( 264 ) |
| 757 |
ஆழியங் கழனி தன்னு |
| |
ளம்பொடு கணையம் வித்திச் |
| |
சூழ்குடர் பிணங்கண் மல்க |
| |
விளைத்தபின றொழுதிப் பல்பேய்க் |
| |
கூழ்படு குருதி நெய்யி |
| |
னிறைச்சிச்சோ றூட்டி வென்றி |
| |
வீழ்தர வேட்டு நின்றா |
| |
ரெய்துப வெகுளல் வேண்டா. |
|
|
(இ - ள்.) ஆழி அம் கழனி தன்னுள் - சக்கர வியூகமாக வகுத்த படையாகிய விளைநிலத்தே; அம்பொடு கணையம் வித்தி - அம்பையுந் தண்டாயுதத்தையும் விதைத்து; சூழ்குடர்ப் பிணங்கள் மல்க விளைத்தபின் - குடர்கள் சூழ்ந்த பிணங்களாகிய நெல்லை நிறைய விளைவித்தபிறகு; ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சிச் சோறு பல் பேய்க்கு ஊட்டி - முறைமைப்படியுள்ள, குருதி நெய்யுடன் ஊன் சோற்றைப் பல பேய்களுக்கும் உண்பித்து; வென்றி வீழ்தர வேட்டு நின்றார் எய்துப - வென்றிமகள் விரும்பக் களம் கொண்டு நின்றவர்கள் இவளை அடைவர்; வெகுளல் வேண்டா - நீவிர் வீணே சினவுதல் வேண்டா.
|
|
|
(வி - ம்.) இவை இரண்டும் தண்டம்.
|
( 265 ) |
| 758 |
போர்ப்பறை முழங்கி யெங்கும் |
| |
பொருவளி புடைக்கப் பட்ட |
| |
கார்க்கடல் போன்று சேனை |
| |
கலக்கமோ டூரறி யார்ப்பத் |
| |
தார்ப்பொலி மார்ப னோர்த்துத் |
| |
தன்கையில் வீணை நீக்கி |
| |
வார்ப்பொலி முலையி னாட்கு |
| |
வாய்திறந் திதனைச் சொன்னான். |
|
|
(இ - ள்.) பொருவளி புடைக்கப்பட்ட கார்க்கடல் போன்று - மோதுகின்ற காற்றினால் தாக்கப் பெற்ற கரிய கடலைப் போல; எங்கும் போர்ப் பறை முழங்கி - எங்கும் போர் முரசு
|
|