| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
445 |
|
|
காண்டும் என்று - சிறப்புடையது அறிவோம் என்று; இங்கு வார் முரலும் கலை - இவ்விடத்தில், நீண்ட, ஒலிக்கும் மேகலையை; ஏந்து அல்குல் - ஏந்திய அல்குலையுடைய; நங்கை வாள்படை - தத்தையின் வாளேந்திய பெண்படை; நங்கையைச் சூழ்ந்தது - தத்தையைச் சூழ்ந்து நின்றது.
|
|
|
(வி - ம்.) இங்கு என்பது தத்தை யிருக்கும் இடம்.
|
( 271 ) |
வேறு
|
|
| 764 |
கூன்களுங் குறளு மஞ்சிக் |
| |
குடர்வெந்து கொழும்பொற் பேழை |
| |
தான்கொளப் பாய வோடிச் |
| |
சாந்துக்கோய் புகிய செல்வ |
| |
தேன்கொள்பூ மாலை சூடித் |
| |
தாமமாய்த் திரண்டு நிற்ப |
| |
வான்பளிங் குருவத் தூணே |
| |
மறைபவு மாய வன்றே. |
|
|
(இ - ள்.) கூன்களும் குறளும் அஞ்சிக் குடர் வெந்து - (படையெழுச்சி கண்ட) கூனும் குறளும் நடுங்கிக் குடல் தீய்ந்து; கொழும் பொன் பேழை தான் கொளப் பாய ஓடி - வளமிகும் பொன் பெட்டி தங்களை உள்ளடக்கிக் கொள்ளுமென்று கருதி அதனுள்ளே பாய்கைக்கு ஓடியும்; சாந்துக் கோய் புகிய செல்வ - சாந்திருந்த பரண்களிலே புகுதற்குச் செல்வனவும்; தேன் கொள் பூமாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்ப - தேனுற்ற மலர் மாலைகளை அணிந்து மாலை வடிவமாகத் திரண்டு நிற்பனவும்; வான்பளிங்கு உருவத்தூணே மறைபவும் ஆய - சிறந்த பளிங்கினாலாகிய அழகிய தூணிலே மறைவனவும் ஆயின.
|
|
|
(வி - ம்.) இச்செய்யுள் இனிய நகைச்சுவைக்கு இடனாதலுணர்க. இந்நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் முறுவலித்தலை அடுத்த செய்யுளிற் காண்க.
|
( 272 ) |
| 765 |
இங்கித நிலைமை நோக்கி |
| |
முறுவலித் தெரிபொன் மார்ப |
| |
னங்கையைக் காக்கும் வண்ண |
| |
நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச் |
| |
சிங்கந்தான் கடிய தாங்கோர் |
| |
செழுஞ்சிங்க முழுக்கிற் சீறிப் |
| |
பொங்கிமேற் செல்வ தேபோற் |
| |
பொலங்கழ னரலச் சென்றான். |
|