| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
455 |
|
|
போலக் கொடிய களிற்றின் கொம்புகள் உழுது; அகன்ற மார்பம் கீற்றுப்படடு அழகிதாகக் கிடக்க எனக் கொடுத்து நிற்பார் - பரந்த மார்பு கீற்றுப்பட்டு அழகாகக் கிடக்க என்று (மார்பை யானையினிடம்) கொடுத்து நிற்பார்.
|
|
|
(வி - ம்.) இது முதல் நான்கு செய்யுட்கள் சீவகன் தோழர் செயல் கூறுகின்றன.
|
( 290 ) |
| 783 |
கழித்துவா ளமலை யாடிக் |
| |
காட்டுவார் கண்கள் செந்தீ |
| |
விழித்துமேற் சென்ற வேழம் |
| |
வேலினால் விலக்கி நிற்பார் |
| |
தெழித்துத் தோ்க் கயிறு வாளா |
| |
லரிந்திட்டுப் புரவி போக்கிப் |
| |
பழிப்பில கொணர்ந்து பூட்டு |
| |
பாகந் யென்று நிற்பார். |
|
|
(இ - ள்.) கழித்து வாள் அமலை ஆடிக் காட்டுவார் - (உறையினின்றும்) கழித்து வாட்கூத்தாடிக் காட்டுவார்; செந்தீ விழித்து மேல் சென்ற வேழம் - நெருப்பெழ விழித்து எதிர் நோக்கி வந்த வேழத்தை; வேலினால் விலக்கி நிற்பார் - வேலால் தடுத்து நிற்பார்; தெழித்துத் தேர்க் கயிறு வாளால் அரிந்திட்டுப் புரவி போக்கி - (பாகனைச்) சீறித் தேர்க் கயிற்றை வாளால் அறுத்துக் குதிரையை ஓட்டிவிட்டு; பாக! பழிப்பில் கொணர்ந்து பூட்டு என்று நிற்பார் - பாகனே! குற்றம் அற்ற புரவிகளைக் கொண்டுவந்து பூட்டுக என்று நிற்பார்.
|
|
|
(வி - ம்.) வாளமலை - போர்க்களத்து மறவர் வாளை விதிர்த்தாடும் ஒருவகைக் கூத்து. இதனை, ”களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவாளோர் ஆடு ஒள்வா ளமலை” என வரும் தொல்காப்பியத்தானும், வேந்தன் ”வலிகெழுதோள் வாள்வயவர் ஒளிகழலான் உடனாடின்று' எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையானும்(147) உணர்க.
|
( 291 ) |
| 784 |
ஐங்கதிக் கலினப் பாய்மாச் |
| |
சிறிதுபோர் களையீ தென்பார் |
| |
வெங்கதிர் வேலிற் சுட்டி |
| |
வேந்தெதிர் கொண்டு நிற்பார் |
| |
நங்கைகல் யாணம் நன்றே |
| |
நமக்கென நக்கு நிற்பார் |
| |
சிங்கமும் புலியும் போன்றார் |
| |
சீவகன் றோழன் மாரே |
|