பக்கம் எண் :

                     
காந்தருவ தத்தையார் இலம்பகம் 457 

இன்னணமாயினார். அஃது எங்ஙனே யெனின், என்பார் விடாது நிற்பார், கொடுத்து நிற்பார், காட்டுவார், விலக்கி நிற்பார், பூட்டென்று நிற்பார், களையென்பார், எதிர்கொண்டு நிற்பார், நக்கு நிற்பாராய்ச் சிங்கத்தையும் புலியையும் ஒத்தார் என்க.

 

   இவை நான்கு கையிலும் நின்ற படைத் தலைவரல்லாத் தோழர் பொருதபடி கூறின.

( 293 )
786 கூட்டுற முறுக்கி விட்ட
  குயமகன் றிகிரி போல
வாட்டிறற் றேவ தத்தன்
  கலினமா மாலை வெள்வே
லீட்டம்போழ்ந் தியானை நெற்றி
  யிருங்குளம் பழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளா
  மணிசிந்தித் திரியு மன்றே.

   (இ - ள்.) கூட்டு உற முறுக்கி விட்ட குயமகன் திகிரி போல - மண்ணுருண்டையுடன் திரித்துவிட்ட குயவனுடைய சக்கரம்போல; வாள் திறல் தேவதத்தன் கலின மா - வாள் வலி படைத்த தேவதத்தனுடைய புரவி; மாலை வெள்வேல் ஈட்டம போழ்ந்து - மாலை யணிந்த வெள்ளிய வேற்படையின் திரளைப் பிளந்து; யானை நெற்றி இருங் குளம்பு அழுத்தி - யானையின் நெற்றியிலே குளம்புகளை அழுத்தி; மன்னர் சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி - மன்னர் அணிந்த போர்ப்பூ முடிமாலை முடிமணி ஆகியவற்றைச் சிதறி; திரியும் - திரியும்.

 

   (வி - ம்.) இதுமுதல் நான்கு செய்யுட்கள் தோழர் மூவரும் நபுல விபுலரும் பொருதபடி கூறுகின்றார்.

 

   கூட்டு - மண்கூட்டு. 'பசுமட்குரூஉத்திரள்' என்றார் புறத்தினும் (32). கலினமா - குதிரை. சூட்டு - போர்ப்பூ, சூளாமணி - முடியின் மணி.

( 294 )
787 பாய்ந்தது கலின மாவோ
  பறவையோ வென்ன வுட்கி
வேந்தர்தம் வயிறு வேவ
  நபுலமா விபுல ரென்பார்
காய்ந்துதம் புரவிக் காமர்
  குளம்பினால் களிற்றி னோடை
தேய்ந்துகச் சோ்த்தி மாலைத்
  திருமுடித் திலகங் கொண்டார்.