| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
460 |
|
|
(இ - ள்.) சீவகன் தம்பியை நோக்கி - சீவகன் நந்தட்டனைப் பார்த்து; இம்பர் நம் இடர்கெட இரண்டும் வல்லையாய் - இவ்விடத்தில் நமது துன்பம் கெட வீரமந்திரம் இரண்டையும் நீ கற்று; சாமரை வெம்பரி மான் செவி - சாமரையையும் விரை வினையுமுடைய புரவியின் செவிகளிலே; நீ மொழிக என நயந்து கூறினான் - நீ உரைப்பாயாக என்று விரும்பிக் கூறினான்.
|
|
|
(வி - ம்.) இரண்டும் - பறப்பிக்கு மதுவும் வேண்டுமிடத்தே நிறுத்துவிப்பதுவும். மந்திரம ்: குதிரைகளை விரைவிற் செலுத்தும் காண்ட மந்திரம்.
|
|
|
மந்திரம் இரண்டையும் அவனுக்கு ஓதி இவற்றைக் கற்று வல்லையாய் நீ மொழிக என்றான் என்க. தம்பி : நந்தட்டன்.
|
( 300 ) |
வேறு
|
|
| 793 |
மந்திரங் கேட்டு நான்கும் |
| |
வானெட்டிப் புகுவ வேபோ |
| |
லந்தரத் திவர்ந்த வாழிக் |
| |
கானிலம் விட்ட மாலைச் |
|
| 791 |
பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டிய |
| |
மன்னரோ டிளையவர் மறலி வாளம |
| |
ரின்னண மித்தலை மயங்க வத்தலைக் |
| |
கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம். |
|
|
(இ - ள்.) பொன் அனாள் புணர்முலைப் போகம் வேண்டிய மன்னரோடு - திருவனைய தத்தையின் முலைகளின் இன்பம் விரும்பிய அரசரோடு; இளையவர் மறலி - தோழர்கள் மாறுபடுதலாலே; வாள் அமர் இத்தலை இன்னணம் மயங்க - வாட்போர் இங்கே இவ்வாறு மயங்குற; அத்தலைக் கொல்நவில் வேலினான் நிலைமை கூறுவாம் - ஆண்டு நின்ற, கொலையிற் பழகிய வேலினானாகிய சீவகன் நிலையை விளம்புவோம்.
|
|
|
(வி - ம்.) பொன் - திருமகள். இளையவர் என்றது சீவகன் தோழரை. மறலி - மறல. கொல்நவில் வேலினான் - கொலைத்தொழிலிற் பயின்ற வேலை ஏந்திய சீவகன்.
|
( 299 ) |
| 792 |
தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை |
| |
வெம்பரி மான்செவி வீர மந்திர |
| |
மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய் |
| |
நம்பிநீ மொழிகென நயந்து கூறினான். |
|