பக்கம் எண் :

                   
காந்தருவ தத்தையார் இலம்பகம் 464 

   குனிந்தவாறே சிலை குனிந்ததொழிந்தது என்றது அதன் கடுப்பால் அதன் நிமிர்ச்சியும் வளைதலும் காணப்படவில்லை என்றவாறு.

( 305 )
798 நுங்களை வீணை வென்ற
  நூபுர வடியி னாடன்
வெங்களித் தடங்கண் கண்டீர்
  விருந்தெதிர் கொண்மி னென்னா
வங்களி யரசர்க் கெல்லா
  மோரொன்று மிரண்டு மாகச்
செங்களிப் பகழி யொப்பித்
  துள்ளவா றூட்டி னானே.

   (இ - ள்.) நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன் வெம் களித் தடம் கண் கண்டீர் - (இவை கணைகள் அல்ல) உங்களை வீணையிலே வென்ற சிலம்பு ஒலிக்கும் அடியினாளின் வெவ்விய பெரிய கண்களென் றறியுங்கள்; விருந்து எதிர் கொண்மின் என்னா - (இவற்றை) விருந்தாக வந்து ஏற்றுக் கொள்வீர்களாக என்றுரைத்து; அம் களி அரசர்க்கு எல்லாம் - செருக்கினையுடைய வேந்தர்கட்கு எல்லாம்; ஓர் ஒன்றும் இரண்டும ஆக - ஒன்றும் இரண்டுமாக; செம்களிப் பகழி ஒப்பித்து - செவ்விய களிப்புறுங் கணைகளை விடுத்து; உள்ள ஆறு ஊட்டினானே - அவர்களுடைய தகுதிக்கேற்றவாறு ஊட்டினான்.

 

   (வி - ம்.) 'விருந்து' என்பதற் கேற்ப 'ஊட்டினான்' என்றார். இதனால், மணங் குறைந்தும் போகாது நின்றவர்க்கு அவள் கண்ணைப் பெறுமாறு இங்ஙன மல்லதில்லை யென்று கூறி, அவரை நோவித்தபடி கூறினார்.

( 306 )
799 நன்மன வேந்தர் தங்க
  ணகைமணி மார்ப நக்கிப்
புன்மன வேந்தர் தங்கள்
  பொன்னணி கவசங் கீறி
யின்னுயிர் கவர்ந்து தீமை
  யினிக்கொள்ளு முடம்பி னுலுந்
துன்னன்மி னென்ப வேபோற்
  சுடுசரம் பரந்த வன்றே.

   (இ - ள்.) நல்மன வேந்தர் தங்கள் நகைமணி மார்பம் நக்கி - நல்ல மனமுடைய மன்னரின் ஒளிவிடும் மணிமார்பைத் தீண்டி வருத்தியும்; இனிக்கொள்ளும் உடம்பினானும் தீமை