காந்தருவ தத்தையார் இலம்பகம் |
467 |
|
803 |
வேழவெண் கோட்டு மெல்கோ |
|
றின்றுகூன் குருதி வாளா |
|
லாழநா வழித்து நெய்த்தோர் |
|
கொப்புளித் தழிந்த மாவின் |
|
சூழ்குடர்க் கண்ணி சூடி |
|
நிணத்துகி லுடுத்து வெள்ளென் |
|
பூழ்பெற வணிந்து சூற்பே |
|
யாடக்கண் டுவந்து நக்கான். |
|
(இ - ள்.) வேழ வெண் கோட்டு மெல்கோல் தின்று - களிறுகளின் வெண் கொம்பாகிய மெல்கோலைத் தின்று; கூன் குருதி வாளால் நா ஆழ வழித்து - வளைந்த குருதி வாளினால் நாவை அழுத்தி வழித்து; நெய்த்தோர் கொப்புளித்து - குருதியினால் வாய் கொப்புளித்து; அழிந்த மாவின் சூழ்குடர்க் கண்ணி சூடி - இறந்த குதிரைகளின் சூழ்ந்த குடர்களாகிய கண்ணியை அணிந்து; நிணத்துகில் உடுத்து - ஊன் ஆடை உடுத்து; ஊழ்பெற வெள் என்பு அணிந்து - முறையாக வெண்மையான என்புகளை மாலையாகத் தரித்து; சூல் பேய் ஆடக்கண்டு - சூல்கொண்ட பேய் ஆடுவதைப் பார்த்து; உவந்து நக்கான் - மகிழ்ந்து நகைத்தான் சீவகன்.
|
|
(வி - ம்.) மெல் கோல் : வினைத்தொகை.
|
|
இச் செய்யுளும் அடுத்து வருஞ் செய்யுளும் மறக்கள வேள்வி என்னும் வாகைத் திணைத் துறையின் பாற்படும். அஃதாவது,
|
|
|
”அடுதிறல் அணங்கார விடுதிறலான் களம் வேட்டன்று.” |
|
எனவும்,
|
|
|
”பிடித்தாடி அன்ன பிறழ்பற்பேய் ஆரக் |
|
|
கொடித்தானை மன்னன் கொடுத்தான் முடித்தலைத் |
|
|
தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக |
|
|
மூளையஞ் சோற்றை முகந்து” (புறப். வெண். 760) |
|
எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க.
|
( 311 ) |
804 |
வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற் |
|
களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி |
|
யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம் |
|
விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே. |
|
(இ - ள்.) வெளிற்று உடல் குருதி வெள்ளம் நிலை இது என்ப போல் - குருதி நீங்கிய பிணத்தையுடைய குருதிப்
|
|