பக்கம் எண் :

                 
காந்தருவ தத்தையார் இலம்பகம் 472 

811 செங்கண்மா றெழிக்ப் பட்ட
  வலம்புரித் துருவங் கொண்ட
சங்குவாய் வைத்து நம்பன்
  றெழித்தலுந் தறுக ணாளி
பொங்கிய முழக்கின் வேழப்
  பேரினம் புலம்பி னாற்போற்
றங்குதார் மன்ன ரெல்லாந்
  தளர்ந்துகண் சாம்பி னாரே.

   (இ - ள்.) செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவம் கொண்ட - கண்ணனாற் பாரதப் போர்ரில் முழக்கப்பெற்ற வலம்புரியை ஒப்பாகக் கொண்ட; சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் - சங்கை வாயில் வைத்துச் சீவகன் முழக்கினவுடன்; தறுகண் ஆளி பொங்கிய முழக்கில் - அஞ்சாத ஆளியின் பெரு முழக்கினாலே; வேழப் பேரினம் புலம்பினாற்போல் - களிற்றுப் பெருந்திரள் கலங்கினாற் போல; தங்குதார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினார் - மார்பில் தங்கிய தாரணிந்த வேந்தர்கள் எல்லோரும் தளர்ச்சியடைந்து கண்ணொளி மழுங்கினர்.

 

   (வி - ம்.) அவர் அஞ்சினமை கண்டு வெற்றிச் சங்கு முழக்கினான். துருவம் - ஒப்பு.

( 319 )
811 அருவரை நாகஞ் சுற்றி
  யாழியான் கடைய வன்று
கருவரை குடையப் பட்ட
  கடலெனக் கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் றிண்டோ்
  மஞ்ஞையே முருகன் தானென்
றொருவரோ டொருவர் கூடா
  வண்ணமே யுடைய லுற்றார்.

   (இ - ள்.) ஆழியான் அருவரை நாகம் சுற்றி அன்று கடைய - திருமால் அரிய மந்தர மலையை நாகத்தாற் பிணித்து முற்காலத்திற் கடைந்தபோது; கருவரை குடையப்பட்ட கடல் என வேந்தர் கலங்கி - கரிய அம் மலையினாலே கலக்கப்பெற்ற கடலென்னுமாறு மன்னர் கலக்குற்று; திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே - அழகிய மலையனைய மார்பனின் திண்ணிய தேர் மயிலே; தான் முருகன் என்று - சீவகன் முருகனே