காந்தருவ தத்தையார் இலம்பகம் |
473 |
|
என்று; ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார் - ஒருவருடன் ஒருவர் சேராதவாறே புறங்கொடுத் தோடலுற்றார்.
|
|
(வி - ம்.) கருவரை - பெருமலையுமாம். அவன் பல கைகளாற்படை வழங்கினாற்போல இவனும் படை வழங்குதலாலும் வடிவாலும் முருகனே என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 320 ) |
813 |
முளிமரக் காடு மேய்ந்த |
|
முழங்கழல் போன்று மைந்தன் |
|
றெளிநலக் குமரர் கூற்றிற் |
|
றெழித்தனர் பகழி சிந்தி |
|
யொளிநல வுப்புக் குன்ற |
|
மூர்புனற் குடைந்த தேபோற் |
|
களிநல மன்னர் தங்கள் |
|
கடற்படை யுடைந்த தன்றே. |
|
(இ - ள்.) முளி மரக் காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று - காய்ந்த மரமுடைய காட்டைப் பற்றிய ஆரவாரமிகும் அழலைப் போல; மைந்தன் தெளிநலம் குமரர் கூற்றின் தெழித்தனர் - சீவகனும் தெளிநலமுடைய அவன் தோழரும் தம்பியரும் கூற்றுவனைப் போல முழங்கினர்; ஒளிநலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல் - (அம் முழக்கினைக் கேட்டு) ஒளியும் அழகும் உடைய உப்புமலை ஊரும் வெள்ளத்திலே கரைந்தாற்போல; களிநல மன்னர் தங்கள் கடல் படை பகழி சிந்தி உடைந்தது - களிப்பும் அழகுமுடைய அரசரின் கடல் போன்ற படை கையிலுள்ள அம்புகளையும் எறிந்துவிட்டு ஓடியது.
|
|
814 |
உறுபடை மன்னர் தம்மை |
|
யுடற்றியொன் றானு மின்றிச் |
|
சிறுபடை யவர்கள் வென்று |
|
 செகுப்பவோ வென்ன வேண்டா |
|
செறியெயிற் றாளி வேழப் |
|
பேரினஞ் செகுத்த தன்றே |
|
வுறுபுலி யொன்று தானே |
|
கலையின முடற்றிற் றன்றே. |
|
(இ - ள்.) சிறு படையவர்கள் உறுபடை மன்னர் தம்மை - சிறிய படையினர் பெரும்படையுடைய வேந்தர்களை; உடற்றி ஒன்றானும் இன்றி - வருத்தித் தமககோர் கெடுதியும் இல்லாமல்;
|
|