காந்தருவ தத்தையார் இலம்பகம் |
484 |
|
833 |
மாழிவாய் விரலிற் காம |
|
னம்பொடு சிலைகை யேந்தத் |
|
தாழிவாய்க் குவளை வாட்கட் |
|
டையலார் பரவச் சார்ந்தார். |
|
(இ - ள்.) மூழிவாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் - மலர்ப் பெட்டியில் இருந்த முல்லை மாலை யணிந்து மணங்கமழுங் கூத்தலையுடைய தத்தையும்; ஊழிவாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறுவாள் தடக்கையானும் - ஊழிக்காலத் தீயைப் போன்று விளங்கும் வாளேந்திய தடக்கைச் சீவகனும்; காமன் அம்பொடு சிலை ஆழிவாய் விரலின் கையேந்த - காமன் அம்பையும் வில்லையும் விரற்சரடணிந்த விரலையுடைய கையில் ஏந்த; தாழிவாய்க் குவளை வாள்கண் தையலார் பரவச் சார்ந்தார் - தாழியில் மலர்ந்த குவளையனைய வாட்கண் மங்கையர் பரவி நிற்க ஓரிருக்கையிலே சேர இருந்தனர்.
|
|
(வி - ம்.) முருகு - மணம். குழலினாள்: தத்தை. ஊழிவாய்த் தீ - ஊழி முடிவில் உலகை அழிக்கும் நெருப்பும்; இது சீவகன் பேராற்றலுக்கு உவமை. தடக்கையான் - சீவகன். ஆழி - மோதிரம்; விரற்சரடுமாம். மூழிவாய் - பூப்பெட்டி.
|
( 341 ) |
834 |
இன்னிய முழங்கி யார்ப்ப |
|
வீண்டெரி திகழ வேதந் |
|
துன்னினர் பலாசிற் செய்த |
|
துடுப்பினெய் சொரிந்து வேட்ப |
|
சொரிந்தனன் வீர னேற்றான் |
|
வலம்புரி யதனீர் கொண்டான் |
|
முன்னுபு விளங்கு வெள்ளி |
|
முளைத்தெழ முருக னன்னான். |
|
(இ - ள்.) இன்னியம் முழங்கி ஆர்ப்ப - இனிய இசைக் கருவிகள் முழங்கிக்கொண்டிருக்க; ஈண்டு எரி திகழ - மிகுதியான தீ விளங்குமாறு : வேதம் துன்னினர் - மறையுணர்ந்த சீவகனுக்கு நெருங்கிய அந்தணர்; பலாசின் செய்த துப்பின் - புரசமரத்தாற் செய்த துடுப்பினால்; நெய் சொரிந்து வேட்ப - நெய்யை வார்த்து வளர்க்க; வெள்ளி முளைத்து எழ - வெள்ளி முளைத்த அளவிலே; வீரன் மின் இயல் கலசம் நன்னீர் சொரிந்தனன் - சீதத்தன் ஒளி பொருந்திய கலசத்திலே நன்னீரை வார்த்தனன்; முருகன் அன்னான் முன்னுபு ஏற்றான் - முருகனைப் போன்ற சீவகனும் கருதி ஏற்றான்.
|
|