குணமாலையார் இலம்பகம் |
497 |
|
என்றஞ்சி ஏதிலான் ஒருவனை வாளாற் கொன்று உருத்தெரியாமல் புரட்டிவிட்டுக் கட்டியங்காரன் பாற் சென்று ”அரசே! மழையும் காற்றும் மிக்கமையால் சீவகனை உயிருடன் கொணர்தல் அருமையாயிற்று. ஆதலால் அவனைக் கொன்று வீழ்த்திவிட்டேன்” என்றனன். அதுகேட்ட கட்டியங்காரன் மதனனைப் பாராட்டிச் சிறப்புகள் பலவும் நல்கினான்.
|
|
851 |
காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல |
|
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண ழன்னி |
|
ஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப் |
|
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான். |
|
(இ - ள்.) காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல - குற்றம் அற்ற, துறவு நெறியிற் சிறப்புற்ற முனிவரின் உள்ளம்போல; வெய்யோன் மாசு அறு விசும்பின் வடதிசை அயணம் முன்னி - கதிரவன் தூய வானிலே வடதிசைச் செலவைக் கருதி; ஆசு அற நடக்கும் நாளுள் - நலம்பெறச் செல்லும் நாட்களிலே; ஐங்கணைக் கிழவன் வைகி - காமன் தான் தங்குவதற்கு; பாசறைப் பரிவு தீர்க்கும் - பாசறையிலே தங்கியிருப்போரின் வருத்தத்தை நீக்கும; பங்குனிப் பருவம் செய்தான் - இளவேனிற் காலத்தைப் பிறப்பித்தான்.
|
|
(வி - ம்.) 'அயனம்' என்னாமல் 'அயணம்' என்று பாகதத்தாற் கூறினார் செய்யுட் சொல்லாதலின். வைகி - வைக : எச்சத் திரிபு. கூதிர்க் காலத்தே (போர்மேற் சென்றோர்) பாடி வீட்டிலிருந்து, இளவேனிற்கண் இன்பம் நுகர மனைதிரும்புவாராதலின், 'பாசறைப் பரிவு தீர்க்கும்' என்றார்.
|
|
'தலை வந்த திளவேனில்' (சீவக, 948) என எதிர்நோக்கிக் கூறிய காலத்தே, ஈண்டு நீர்விளையாட்டு நிகழ்கின்றதென்பர், அக்காலத்தைச் சிறப்பித்துரைக்கின்றார்.
|
|
உலகின்கண் கார்முதலிய பருவங்கள் உண்டாதற்கு ஞாயிற்று மண்டிலத்தின் வடதிசைச் செலவும் தென்றிசைச் செலவும் காரணமாதல்பற்றி வெய்யோன் பருவம் செய்தான் என அவன் செயலாக்கிக் கூறினர்.
|
|
விசும்பிற்குக் கடவுளர் சிந்தை உவமை. ஐங்கணைக் கிழவன் - காமன்.
|
( 1 ) |
852 |
தோடணி மகளிர் போன்ற |
|
துணர்மலர்க் கொம்பர் கொம்பி |
|
னாடவர் போல வண்டு |
|
மடைந்தன வளியிற் கொல்கி. |
|