| குணமாலையார் இலம்பகம் |
506 |
|
| 870 |
கள்ள வானர முங்கன்னி யூகமுந் |
| |
துள்ளு மானொடு வேழத் தொகுதியும் |
| |
வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ |
| |
ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே. |
|
|
(இ - ள்.) கள்ள வானரமும் - திருட்டுப் பண்புடைய குரங்கையும்; கன்னி யூகமும் - கன்னித் தன்மையுடைய கருங்குரங்கையும்; துளளும் மானொடு வேழத் தொகுதியும் - துள்ளும் மான்களையும், யானைத் திரள்களையும்; வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து - வெள்ளைநிற அன்னத்தையும் மயிலையும் அணிந்து; அவண் உள்ளும் மாந்தரை - அவ்விடம் தம் துணையை நினைக்கும் மக்களை; உள்ளம் புகற்றும் - நெஞ்சில் விருப்பமூட்டும்.
|
|
|
(வி - ம்.) பிறர் பொருளைக் கவர்ந்துகோடலின் கள்ள வானரம் என்றார். கன்னியூகம் - கன்னிமையுடைய பெண்குரங்கு. தோகை: ஆகுபெயர்; மயில். உள்ளும் மாந்தர் என்றது தங்காதற்றுணைவரை நினைக்கும் மாந்தர் என்பதுபட நின்றது.
|
( 20 ) |
| 871 |
கோக்க ணங்கொதித் தேந்திய வேலென |
| |
நோக்க ணங்கனை யார்நுகர் - வேய்தலிற் |
| |
றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப் |
| |
பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே. |
|
|
(இ - ள்.) கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என - மன்னர் குழாம் சினந்து ஏந்திய வேல்போல; நோக்கு அணங்கு அனையார் நுகர்வு ஏய்தலின் - நேர்ககுகின்ற நோக்கினையுடைய தெய்வ மகளிர் போன்றவர் தம் கணவரிடம் நுகர்ச்சியால் அவர்களின் உறுப்புக்கள் செவ்விபெறுதலின்; தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரைப் பூக்கணம் - திருமகள் தங்கும் பெரிய தாமரைப் பூக்களின் தொகுதி; பொழில் பட்டது போன்றது - (நீர் நிலையினின்றும் நீங்கி) ஒரு பொழிலிலே தோன்றினதைப் போன்றது.
|
|
|
(வி - ம்.) நோக்குதலால் அணங்கனையாருமாம். முகம் முதலிய தாமரைக்குவமை.
|
|
|
கோக்கணம் - அரசர் குழாம். வேலென நோக்கும் நோக்கினையுடைய அணங்கு அனையார் என்க. வேல் - கண்ணிற்குவமை. ஏய்தல் - இயைதல். தாக்கணங்கு என்றது - திருமகளை.
|
( 21 ) |
| 872 |
கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக |
| |
மூறித் தேன்றுளித் தொண்மது வார்மண |
| |
காரி நாண்மலர் வெண்மணற் றாய்நிழ |
| |
றேறித் தெண்கயம் புக்கது போன்றதே. |
|