| நாமகள் இலம்பகம் |
51 |
|
|
என்னும்] இகர ஈறு ['கூய்' எனத்] திரிந்தது. இனி மேலிற் கவிக்கும் [கண்வலை] பொருந்த மயிலை 1உவமத்தொகைக்கண் வந்த ஆகுபெயரென்று மகளிராக்கி மகளிர் குயிலொடு மாறு கூவினார் என்றுரைப்பதும் ஒரு பொருள். இனிச் சண்பகத்தின் தேன்துளித்தலின் காரென்று 2மயிலொடு மயிலும், வேனிலாதலிற் குயிலொடு குயிலும் கூவிற்றென்றுமாம். சிறுபான்மையில் கூவிற்றென்றலும் மரபு.
|
( 50 ) |
| 80 |
கைபுனை சாந்தமுங் கடிசெய் மாலையு |
| |
மெய்புனை சுண்ணமும் புகையு மேவிய |
| |
நெற்யொடு குங்கும நிறைந்த நாணினாற் |
| |
பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே. |
|
|
(இ - ள்.) கைபுனை சாந்தமும் - கையிற் புனைந்த சந்தனமும்; கடிசெய் மாலையும் -மணமிகு மாலையும்; மெய்புனை சுண்ணமும் - மெய்யில் அணிந்த சுண்ணப்பொடியும்; புகையும் - கூந்தலுக் கூட்டிய நறுமணப் புகையும்; மேவிய நெய்யொடு குங்குமம் - மெய்யிற் பூசிய புழுகுடன் குங்குமமும்; நிறைந்த பொய்கைகள் - நிறைந்த வாவிகள்; நாணினால் பூம்படாம் போர்த்த போன்ற - நாணத்தினாற் பொலிவு மிகும் ஆடையைப் போர்த்த தன்மையை ஒத்தன.
|
|
|
(வி - ம்.) மேவிய நெய் - பூசின புழுகு. குங்குமம் - குங்குமமும். இவை குளிப்பார் அணிந்தன.
|
|
|
இனிப், பிறர் மாசுபட்டதென்னும் நாணினாலே பூவாகிய படாம் போர்த்ததுவுமாம்.
|
( 51 ) |
| 81 |
கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றையின் |
| |
பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சர |
| |
மடிநிலை யிருப்பெழு வமைந்த கன்மதிட் |
| |
புடைநிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே. |
|
|
(இ - ள்.) கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றை - விளக்கமான நலந்தரும் கரும்பும் முற்றிய நெல் தொகுதியும் ஆகிய; இன்பிடி நலம் தழீஇ வரும் பெருங்கைக் குஞ்சரம் - இனிய கவளத்தின் நலத்தை விரும்பி வரும் நீண்ட துதிக்கையையுடைய களிறுகள் நிற்றலையுடைய; அடிநிலை இருப்பு எழு அமைந்த - அடியிளகாமல் நிற்றலையுடைய கணையமரம் அமைந்த, நன்மதிள் புடைநிலை வாரிகள் - நல்ல மதிலின் உட்புறத்திலே நிலைபெற்ற யானைக் கூடங்கள்; பொலிந்த சூழ்ந்த - பொலிவுடன் சூழ்ந்துள்ளன.
|
|
|
(வி - ம்.) பெருங்கையாவது : நிலந்தோய் துதிக்கை. வாரி - யானைக்கூடம். இவை மதிலின் உட்புறத்தே அமைந்துள்ளன. எழு
|
|
|
|
1. உவமையாகு பெயர். 2. இப்பொருளே சிறப்புடையது.
|
|