பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 516 

   (வி - ம்.) நால்வர் என்று உயர்திணையாற் கூறுதல். 'ஒருவரைக் கூறும்' (தொல். கிளவி. 27) என்னுஞ் சூத்திரத்து ஒன்றென முடித்தலாற் கொள்க.

   நால்வர் உளர் என்றது, நான்குவகைப் பறவைகள் (வண்டுகள்) உள என்றவாறு. அவை சான்றாஞ் சிறப்பு நோக்கி உயர்திணையாக ஓதினன் என்று சீவகன் கூற என வினைமுதல் விருவித்தோதுக. கொம்பனாள்: கனகபதாகை.

( 41 )
892 மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்.

   (இ - ள்.) மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று - மங்கையராகிய நல்லவரின் கண்ணையும் உள்ளத்தையும் போல; எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்! - எங்கும் கடிதாக ஓடித் தட்டித் திரியும் சுரும்புகளே ! ; ஒண் மிஞிற்று ஈட்டங்காள் - ஒள்ளிய மிஞிற்றின் திரள்களே!; மது உண்டு மகிழ் வண்டுகாள்!- தேனுண்டு மகிழும் வண்டுகளே!; மது உண்டு தேக்கிடும் தேனினங்கள் - தேன் உண்டு தேக்கெறியும் தேன் திரள்களே.

 

   (வி - ம்.) இஃது அடுத்த செய்யுளுடன் தொடரும்.

 

   இவ்வாறு கொண்டு கூட்டுவது நச்சினார்க்கினியர் கருத்தே. அவர் கூறும் அதற்குரிய காரணமும் பறவைகட்குச் செவியறிவு உண்டா என்னும் ஆராய்ச்சியும் சீவகன் விலங்கு பறவை முதலியவற்றின் ஒலிக்குறிப்பை அறிவானென்பதும் பின்வருமாறு:

 

   கண்ணும் மனமும்போன்று எங்கும் கடிதாக ஓடித் தட்டித்திரியும் சுரும்புகாள் மிஞிறுகாள் என்க. மிஞிற்றிற் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார். கண் சென்றுழிச் செல்கின்ற மனத்தொடே உவமித்தலின் இது நிரனிறை; இவை எல்லா மணத்திலும் செல்லும். மதுவுண்டு மகிழ்கின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும். (சீவக. 3033, 3034) சுரும்பு முதலியன கூறும் பாஷையைச் சீவகன் உணர்ந்திருத்தலின், அதனால் அவற்றை அழைத்தான் என்று கொள்க; விக்கிரமாதித்தன் எறும்பின் மொழியை அறிந்தான் என்று கதை கூறுகின்றமையின். 'தாதுண்தும்பி போது முரன் றாங்கு' (மதுரைக். 655) என்றும், 'இரங்கிசை மிஞிறொடு தும்பி தா தூத' (கலி. 33) என்றும் கூறுதலின், தும்பியது கிளையாம் இந் நான்கும் என்க. 'நண்டுந் தும்பியும் நான்கறிவினவே - பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல். மரபு 31) என்று தும்பிக்குச் செவியின் றெனவே, இவற்றிற்குஞ் செவியின்றாம் ஆதலின், வருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று. இவை ஈண்டு வந்து கரிபோதலில்; கேள்வியில்லன வருதல் என்னை? என்பது கடா. அதற்கு விடை : ஆசிரியர் 'நண்டுந் தும்பியும்' என்று தும்பியைப் பின் வைத்தது, மேல்வருஞ் சூத்திரத்