பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 52 

   கணைய மரம். யானையுண்ணும் உணவு கவளம். மதிள் : மதில் என்பதன் போலி

( 52 )
82 சலசல மும்மதஞ் சொரியத் தத்தமுட்
கொலைமருப் பிரட்டைகள் குளிப்பப் பாய்ந்திரு
மலைதிளைப் பனவென நாக மான்றபோர்
குலவிய நிலைக்களங் கோல மார்ந்தவே.

   (இ - ள்.) இரு மலை திளைப்பன என - இரண்டு மலைகள் தம்மிற் போர் செய்வனபோல; சலசல மும்மதம் சொரிய - சலசல என்று மும்மதங்களும் பெய்ய; கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து - கொலைபுரியும் இரு கொம்புகளும் தைத்து மறையத் தாக்கி; நாகம் தத்தமுள் ஆன்ற போர் - களிறுகள் தமக்குள் பெரும்போர் புரிய; குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்த - வளைத்த நிலைபெற்ற களங்களும் அழகு நிறைந்தன.

( 53 )
83 முத்துடை வெண்மருப் பீர்ந்து மொய்கொளப்
பத்தியிற் குயிற்றிய மருங்கிற் பல்வினைச்
சித்திரக் கிம்புரி வைரஞ் சோ்த்துந
ரொத்திய லிடங்களு மொழுங்கு நீண்டவே.

   (இ - ள்.) முத்துஉடை வெண் மருப்பு ஈர்ந்து - முத்துக்களையுடைய வெள்ளிய கொம்புகளை அறுத்துக் (கூர்மையிட்டு); மொய்கொள - அவை வலிமை கொள்ளுமாறு இடும்; பத்தி மருங்கில் பல்வினைக் குயிற்றிய சித்திரக் கிம்புரி - பத்தி மருங்கிலே பல தொழில்களைச் செய்த அழகிய தந்தப்பூணில்; வைரம் சேர்த்துநர் ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்ட - வைரம் இடுவோர் தம்மிற் பொருந்தி வாழுந் தெருக்களும் ஒழுங்குடன் நீண்டிருந்தன.

 

   (வி - ம்.) [பத்தியின்] : இன் : அசை.

 

   இனி , கிம்புரி வைரம் - கோளகையுமாம் : ஆகுபெயர். கோளகை - யானைத் தந்தப்பூண்.

( 54 )
84 ஓடுதோ்ச் சாரிகை யுகுபொற் பூமியு
மாடக மாற்றுந்தார்ப் புரவி வட்டமும்
கேடக வாட்டொழி லிடமுங் கேடிலாக்
கோடுவெஞ் சிலைத்தொழி லிடமுங் கூடின்றே.

   (இ - ள்.) ஓடு தேர் சாரிகை உகுபொன் பூமியும் - ஓடும் தேரின் விரைவினாலே சிந்தும் பொன்னையுடைய தேரேறும் இடங்களும்; ஆடகம் ஆற்றும் தார்ப்புரவி வட்டமும் - பொன்னாலான தாரினையுடைய குதிரையேறும் இடங்களும்; கேடக