பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 522 

உண்ணலேன் என்று உரையாடினாள் - இனி உண்ணமாட்டேன் என்று கூறினாள்.

 

   (வி - ம்.) மற்று : அசை.

 

   நும்மகள் எண்ணம் விண்ணின் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் போன்று முற்றுப் பெறாததோர் எண்ணம் என்றவாறு.

 

   கண்ணின் ஆடவர் என்றதற்கேற்பக் காதின் ஆடவர் சொல்லைக் கேட்பினும் என்றும் வருவித்துக் கூறுக.

( 52 )
903 இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை
தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா
டின்றே னாவிக்கோர் கூற்ற மெனநையா
நின்று நீலக்கண் ணித்திலஞ் சிந்தினாள்.

   (இ - ள்.) இன்று நீர் விளையாட்டினுள் - இன்று நடந்த நீர்விளையாட்டிலே; ஏந்திழை - சுரமஞ்சரிக்கு; சுண்ணத்தில் தோன்றிய தொன்று வேறுபாடு - சுண்ணங் காரணமாக உண்டாகிய ஊழாலுண்டான வேற்றுமை; இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் - இப்போது என் உயிருக்கோர் காலனாயிற்று; என நையா நின்று - என்று கூறி வருந்தி நின்று; நீலக்கண் நித்திலம் சிந்தினாள் - நீலமலரனைய கண்களாலே முத்தனைய நீரைச் சிதறினாள்.

 

   (வி - ம்.) ஏந்திழை : சுரமஞ்சரி. தொன்று - ஊழ்வினை. தொன்று வேறுபாடு எனக்கூட்டி ஊழினால் வந்த வேறுபாடு என்க. ஆவி - உயிர். நையா : செய்யாவென்னெச்சம். நீலம் - நீலமலர் : ஆகுபெயர். நித்திலம் - கண்ணீர்: உவம ஆகுபெயர்.

( 53 )

வேறு

 
904 பட்டதென் னங்கைக் கென்னப்
  பாசிழைப் பசும்பொ னல்குன்
மட்டவிழ் கோதை சுண்ண
  மாலையோ டிகலித் தோற்றாள்
கட்டவிழ் கண்ணி நம்பி
  சீவகன் றிறத்திற் காய்ந்தா
ளட்டுந்தே னலங்கன் மார்ப
  வதுபட்ட தறிமோ வென்றாள்.

   (இ - ள்.) என் நங்கைக்குப் பட்டது என் என்ன - (அது கேட்ட குபேரதத்தன்) என் மகளுக்கு நேர்ந்தது யாது என்று வினவ; (நற்றாய்); தேன் அட்டும் அலங்கல் மார்ப! - தேன்