|
குணமாலையார் இலம்பகம் |
529 |
|
|
|
(இ - ள்.) விடாக் களிவண்டு உண -
விடாமல், களிப்பையுடைய வண்டுகள் உண்ணுமாறு; விரிந்த கோதையர் படாக்களி
இளமுலை பாய - மலர்ந்த மலர்மாலையரின் சாயாத களிப்பை யூட்டும் இளமுலைகள்
பாய்தலால்; விண்ட தார்க்கடாக் களிற்று ஏறுழ்வலிக் காளை - அலர்ந்த
தாரணிந்த, மதயானை போன்ற மிக்க வலிபடைத்த காளையாகிய; சீவகன் - சீவகன் ;
அடாக் களியவர் தொழில் காண ஏகினான் - ஒழுக்கக் கேடுபண்ணாத
களிப்பையுடையார் விளையாட்டைக் காணச் சென்றான்.
|
|
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர்
‘காளை‘என்பது நந்தட்டனை உணர்த்துவதாகக் கூறிச் சீவகன் அடாக்களியவர்
தொழில் காணுமாறு, நந்தட்டன் அங்கிருந்து போயினான் என்று பொருள்
கூறுவர். அவர் மேலும் கூறுவதாவது:
|
|
|
சுண்ணந் தேற்றுகின்ற காலத்திருந்த நந்தட்டன், சீவகன் நீர்
விளையாட்டின் வினோதங் காணப்போதற்குத் தானும் தனக்குக் கூடுமவர்களுமாக
வேறு போயினான் என்றவாறு. இவன் போகவே, வினோதத்திற்குக் கூடும்
புத்திசேனனும் ஒழிந்தோரும் சீவகனைக் கூடினாராம்.
|
|
|
இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதற்குக் காரணம் நீர்
விளையாட்டணியைச் சென்று காணுதல் சீவகனுக்குத் தகவன்று என்று
கருதியதாதல் வேண்டும்.
|
|
|
இனி, ‘இவை யின்னனவும் பிறவும‘ என்ற (சீவக. 933) செய்யுள் வரை நீர்
விளையாட்டணி காணுதல் கூறப்படும்.
|
( 66 )
|
|
|
|
| 917 |
ஒன்றே யுயிரை யுடையீ |
| |
ரொருவிப் போமி னிவள்க |
| |
ணன்றே கூற்ற மாகி |
| |
யருளா தாவி போழ்வ |
| |
தென்றே கலையுஞ் சிலம்பு |
| |
மிரங்க வினவண் டர்ப்பப் |
| |
பொன்றோய் கொடியி னடந்து |
| |
புனல்சேர் பவளைக் காண்மின். |
|
|
(இ - ள்.) இவள்கண் அன்றே
கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது? -இவள் கண்ணல்லவோ காலனாகி இரக்கம்
இன்றி உயிரைப் போக்குகின்றது?; ஒன்றே உயிரை உடையீர்! ஒருவிப் போமின் -
(ஆதலால்), சேமவுயிரின்றி ஓருயிரே உடையீர் நீங்கிப் போவீராக, என்றே
கலையும் சிலம்பும் இரங்க - என்று கூறுவன போலவே மேகலையும் சிலம்பும்
ஒலிக்க; இன வண்டு ஆர்ப்ப - கூட்டமாகிய வண்டுகள் ஆரவாரிக்க; பொன்தோய்
கொடியின் நடந்து - பொன்னுலகிற் பொருந்திய காமவல்லி போல நடந்து சென்று;
புனல் சேர்பவளைக் காண்மின்! - நீரில் இறங்குகின்றவளைக் காண்மின்!
|
|
|