| குணமாலையார் இலம்பகம் |
533 |
|
|
(வி - ம்.) பவளம் கன மணையின் எனமாறுக. காய்பொன் : வினைத்தொகை. நடலை - துன்பமுமாம். விசும்பின் விடல் இல்மின் என மாறுக. வீடல்இல்மின் என்றது இடையறாத மின்னல் என்றவாறு.
|
( 72 ) |
| 923 |
நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப |
| |
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி |
| |
மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத் |
| |
தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின். |
|
|
(இ - ள்.) நலம்கொள் பூம்பட்டு நான நீரில் கலந்து ஒளிப்ப - அழகிய பூம்பட்டு நானத்தையுடைய குளிக்கினற நீராலே நனைந்து உடம்பிலே ஒடுங்குதலின்; தோன்ற விளங்கி மேனி வெளிப்பட்டதற்கு நாணி - நன்றாக விளக்கமுற்றுத் தம் மெய்யழகு வெளிப்பட்டதற்கு வெளகி; மான மகளிர்போல மணிமேகலைகள் பேசா - மானமுற்ற பெண்டிர்போல மணி மேகலைகள் பேசாமல்; தானம் தழுவிக்கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின் - அல்குலைத் தழுவிக் கிடக்குமாறு செல்கின்றவளின் நிலையை நோக்குமின்.
|
|
|
நானம் - புழுகு; குளித்தலுமாம். நீரான் நனைந்து பட்டோடு பொருந்துதலானே ஒலியவிந்த மேகலைகளை மேனி வெளிப்பட்டதற்கு நாணி அற்றங்காத்து வாய் வாளாகிடந்த என்னுமித் தற்குறிபபேற்றம் ஆற்றவும் இனிதாதல் உணர்க.
|
|
| 923 |
நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப |
| |
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி |
| |
மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத் |
| |
தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின். |
|
| 924 |
தீம்பாற் பசியி னிருந்த |
| |
செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன் |
| |
ஓம்பு தாய்நீர் குடைய |
| |
வொழிக்கும் வண்ண நாடிப் |
| |
பாம்பால் என்ன வெருவிப் |
| |
பைம்பொற் றோடு கழலக் |
| |
காம்போ் தோளி நடுங்கிக் |
| |
கரைசோ் பவளைக் காண்மின். |
|
|
(இ - ள்.) தீ பால் பசியின் இருந்த செவ்வாய் சிறு பைங்களி - இனிய பால்பருகப் பசியுடன் இருந்த சிவந்தவாயையுடைய சிறிய பச்சைக்கிளி; தன் ஓம்பு தாய் நீர்குடைய - தன்னைக் காக்கும் அன்னை தன் பசியை அறியாமல் நீர் குடைதலாலே; ஒழிக்கும் வண்ணம் நாடி - அவளை நீர்குடையாமல் தடுக்கும் வகையிதுவென எண்ணி ; பாம்பு என்ன - பாம்பு பாம் பென்று கூவ; காம்பு ஏர் தோளி வெருவி நடுங்கி - வேய்த்தோளினாள் அஞ்சி நடுங்கி; பைம்பொன் தோடு கழல் - பசிய
|
|