| குணமாலையார் இலம்பகம் |
535 |
|
|
உறையைக் கொழும்பொன் விரலின் நீக்கி - (கண்ணாடிக்கிட்ட) செம்பட்டுறையை வளவிய பொன்னாழியணிந்த விரலாலே நீக்க; அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதிபோன்று - செம்பாம்பு தன்னை முழுதும் பற்றித் திரும்ப விடும்போது தோன்றும் திங்கைளைப் போல; உருவம் தெண்கண்ணாடி தோன்ற வகை காண்மின் - நிறமுறும் தெளிந்த கண்ணாடி காண்குறும் இயல்பை நோக்குமின்.
|
|
|
(வி - ம்.) நீக்கி - நீக்க: எச்சத்திரிபு. காண்பான் : எதிர்கால வினையெச்சம்.
|
|
|
திரு - திருமகள். குருதித்துகிலின் உறை - செம்பட்டுறை; இது செம்பாம்புக்குவமை. அரவம்-ஈண்டுக் கேது. தோன்றும் வகை காண்மின் என மாறுக.
|
( 76 ) |
| 927 |
பலகை செம்பொன் னாகப் |
| |
பளிங்கு நாயாப் பரப்பி |
| |
யலவ னாடும் வகைபோ |
| |
லரும்பொன் கவறங் குருளக் |
| |
குலவும் பவழ வுழக்கிற் |
| |
கோதை புரளப் பாடி |
| |
யிலவம் போதோ் செவ்வா |
| |
யிளையோர் பொருவார்க் காண்மின். |
|
|
(இ - ள்.) செம்பொன் பலகை ஆக - செம்பொன்னாற் பலகையாக; பளிங்கு நாய் ஆப் பரப்பி - பளிங்கினாலே நாயாகச் செய்தவற்றைப் பரப்பி; அல்வன் ஆடும் வகைபோல் அரும்பொன் கவறு அங்கு உருள - நண்டு ஆடுந் தன்மைபோல அரிய பொன்னால் ஆன கவறு தன்னிடத்தே உருளுமாறு; குலவும் பவழ உழக்கில் - பண்ணின பவழ உழக்காலே; கோதை புரளப் பாடி - கோதை அசையுமாறு பாடிக்கொண்டு; இலவம்போது ஏர் செவ்வாய் - இலவ மலரனைய அழகிய செவ்வாயையுடைய; இளையோர் பொருவார்க் காண்மின் - இளமங்கையர் கவறாடுவாரை நோக்குமின்.
|
|
|
(வி - ம்.) செம்பொன்னாலியற்றிய பலகைமிசை பளிங்காற் செய்த நாய்களைப் பரப்பிப் பொன் உழக்கில் பொன் கவறுகளையிட்டு உருட்டிப் பாடிக்கொண்டு சூதுப்போர் பொருதும் மகளிரைக் காண்மின் என்றவாறு.
|
( 77 ) |
| 928 |
தீம்பா லடிசி லமிர்தஞ் |
| |
செம்பொன் வண்ணப் புழுக்க |
| |
லாம்பா லக்கா ரடலை |
| |
யண்பன் னீரூ றமிர்தம் |
|