| குணமாலையார் இலம்பகம் |
547 |
|
|
அரம்பையர் தம் உழை - அரம்பையரிடத்தே; மகிழ்வு எய்தினான் - களிப்புற்றான்.
|
|
|
(வி - ம்.) மடங்கல் ஏறு - ஆண் சிங்கம். அல்குலையும் முலையினையும் முகத்தினையும் சாயலையும் உடைய அரம்பையர் என்று விதந்தார். அவர்தரும் போகவின்பத்தின் சிறப்புணர்த்தற்கு.
|
( 100 ) |
வேறு
|
|
| 951 |
கற்றவைம் பதங்க ணீராக் |
| |
கருவினை கழுவப் பட்டு |
| |
மற்றவன் றேவ னாகி |
| |
வானிடு சிலையிற் றோன்றி |
| |
யிற்றத னுடம்பு மின்னா |
| |
விடரொழித் தினிய னாகி |
| |
யுற்றத னிலையும் எல்லாம் |
| |
ஓதியின் உணர்ந்து கொண்டான். |
|
|
(இ - ள்.) கற்ற ஐம்பதங்கள் நீர்ஆ - கற்ற பஞ்சநமக்கார மந்திரம் நீராகக் கொண்டு ; கருவினை கழுவப்பட்டு - தீவினை கழுவப்பெற்று; அவன் வான் இடு சிலையின் தேவன் ஆகித் தோன்றி - அவன் இந்திர வில்போல வானவனாகித் தோன்றி; இற்ற தன் உடம்பும் - விடப்பட்ட தன் உடம்பையும்; இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி உற்றவன் நிலையும் - துன்பந்தரும் இடரைக் கெடுத்துத் தனக்கு இனியவனாகித் தன்னைச் சேர்ந்த சீவகன் நிலையும்; எல்லாம் ஓதியின் உணர்ந்து கொண்டான் - யாவற்றையும் தன் அகஅறிவினாற் கண்டுணர்ந்தான் என்க.
|
|
|
(வி - ம்.) 'இற்றஅவ் வுடம்பு' எனவும், 'உற்றவன் நிலை' எனவும் பாடம்.
|
|
|
ஐம்பதங்கள் - ஐந்தெழுத்து மந்திரம். கருவினை - ஈண்டுத் தீவினை. முன்னர் நீனிறவினை என்றதும் நினைக. ”வானிடு சிலையிற்றோன்றி” என்பதற்கு, நூல்கள் இந்திரவில் இன்னவாறு தோன்றுமென்று அது தோன்று முறைமை கூறாவாகலின் அங்ஙனம் தோன்றுகின்ற தேவர்க்கு அஃது உவமையாயிற்று. இக் கருத்தானன்றே 'வானிடு வில்லின் வரவறியா' என்றா
|
|
|
பிறரும்” என்று வியக்கங் கூறியுள்ளார். ஓதி - முற்பிறப்பை யுணரும் அறிவு.
|
( 101 ) |
வேறு
|
|
| 952 |
இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத் |
| |
தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனை |
| |
விரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான் |
| |
சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே. |
|