| குணமாலையார் இலம்பகம் |
556 |
|
|
(வி - ம்.) 'அணிதக்க குவளை வாட்கண்' என்று கூட்டி, 'ஏற்ப' என்னும் எச்சம் தக்க என்னும் வினைகொண்டது என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
இந் நூலாசிரியர் கலைபயிலுதல் அரசு கட்டிலேறுதல் முதலியவற்றையும் திருமணமாகக் கூறும் தம் வழக்கத்திற்கேற்பவே ஈண்டும் புனலாட்டின்பத்தையும் மகளிர் போகமாகவே கூறுகின்றார். கடிக்கய மடந்தை - மணமுடைய குளமாகிய நங்கை. கலாபம் - ஓர் அணிகலன். அணிதக்க முகம் - அழகு வீற்றிருத்தற்கு ஏற்ற முகம். நன்னுதல் : அன்மொழி.
|
( 114 ) |
| 965 |
தண்ணுமை முழவு மொந்தை |
| |
தகுணிச்சம் பிறவு மோசை |
| |
யெண்ணிய விரலோ டங்கை |
| |
புறங்கையி னிசைய வாக்கித் |
| |
திண்ணிதிற் றெறித்து மோவார் |
| |
கொட்டியுங் குடைந்து மாடி |
| |
யொண்ணுதன் மகளிர் தம்மோ |
| |
டுயர்மிசை யவர்க ளொத்தார். |
|
|
(இ - ள்.) தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் - தண்ணுமை முதலியவற்றின் ஓசைகளையும்; பிறவும் எண்ணிய ஓசை - மற்றும் எண்ணி கருவிகளின் ஓசைகளையும்; விரலோடு அங்கை புறங் கையின் இசைய - விரலாலும் உள்ளங்கையாலும் புறங்கையாலும் பொருந்துமாறு; திண்ணிதின் தெறித்தும் கொட்டியும் குடைந்தும் ஆக்கி - உறுதியாகத் தெறித்தும் தட்டியும் கலக்கியும் நீரிலே பிறப்பித்து; ஓவார் - ஒழிவிலராய்; ஒண் நுதல் மகளிர் தம்மோடு ஆடி - ஒள்ளிய நெற்றியையுடைய மகளிருடன் ஆடி ; உயர்மிசை யவர்கள் ஒத்தார் - வானலகத்த வரைப் போன்றனர் ஆடவர்கள்.
|
|
|
(வி - ம்.) தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் என்பன இசைகருவிகள். உயர்மிசையவர்கள் - வானவர். இன்ப நுகர்ச்சிக்கு வானவர் உவமை.
|
( 115 ) |
| 966 |
சிவிறியின் மாறு தூயுங் |
| |
குங்கும மெறிந்துந் தேங்கொ |
| |
ளுவறுநீ ருழக்கி யோட்டி |
| |
யுடைபுறங் கண்டு நக்குத் |
| |
தவறெனத் தாமம் பூட்டித் |
| |
தருதிறை கொண்டு மின்பத் |
| |
திவறினார் காம வெள்ளத் |
| |
தேத்தருந் தன்மை யாரே. |
|