| குணமாலையார் இலம்பகம் |
557 |
|
|
(இ - ள்.)
தேன் கொள் உவறு நீர் - இனிமை கொண்ட ஊற்று நீரில்; சிவிறியின் மாறு தூயும் -
நெடுந்துருத்தியினால் மாறுகொண்டு தூவியும்; குங்குமம் எறிந்தும் - குங்குமத்தை மேலே
வீசியும்; உழக்கி ஓட்டி உடைபுறம் கண்டு நக்கு - (நீரைக்) கலக்கி வெளியேற்றித் தோல்வி
கண்டு நகைத்து; தவறு எனத்தாமம் பூட்டித் தரு திறை கொண்டும் - அஞ்சினாய் ஆகையால் தவறு
செய்தாய் என்று கூறி மலர்மாலையாற் பிணித்துத் திறை பெற்றும்; ஏத்தருந் தன்மையார் -
புகழ்தற்கரிய பண்பினார்; காம வெள்ளத்து இன்பத்து இவறினார் - (மேலும்) காம வெள்ள
இன்பத்திலே மிகுந்தனர்.
|
|
|
(வி - ம்.)
தரு திறை : புணர்ச்சியின்பம்.
|
|
|
சிவிறி - நீர் வீசுமொரு கருவி. தூயும் - தூவியும். மாறுதூவுதல்
- ஒருவர்மேல் ஒருவர் எதிர்நின்று தூவுதல். உடைபுறம் - உடைதலானே காட்டப்படும் முதுகு.
உவறு நீர் - ஊறும் நீர்; 'உவறு நீர் உயர் எக்கர்' என்றார் கலியினும் (136.) இவறுதல்
- மிகுதல்.
|
( 116 ) |
| 967 |
சாந்தக நிறைந்த தோணி |
| |
தண்மலர் மாலைத் தோணி |
| |
பூந்துகி லார்ந்த தோணி |
| |
புனைகலம் பெய்த தோணி |
| |
கூந்தன்மா மகளிர் மைந்தர் |
| |
கொண்டுகொண் டெறிய வோடித் |
| |
தாந்திரைக் கலங்கள் போலத் |
| |
தாக்குபு திரியு மன்றே. |
|
|
(இ - ள்.)
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு ஓடி எறிய - கூந்தலையுடைய மகளிரும் ஆடவரும்
சாந்து முதலியவற்றைக் கொண்டு ஓடி எறிதலால்; சாந்தகம் நிறைந்த தோணி - சாந்தைத்
தன்னிடத்தே கொண்ட தோணியும்; தண்மலர் மாலைத் தோணி - குளிர்ந்த மலர்மாலை கொண்ட
தோணியும்; பூந்துகில் ஆர்ந்த தோணி - பூவேலை செய்த ஆடை நிறைந்த தோணியும்; புனைகலம்
பெய்த தோணி - அணிகலம் கொண்ட தோணியும்; தாம் - ஆகிய இவைகள்; திரைக் கலங்கள் போல -
கடலிற் கலங்கள் போல; தாக்குபு திரியும் - தம்மில் தாக்கித் திரியும்.
|
|
|
(வி - ம்.)
அன்று, ஏ : அசைகள்.
|
|
|
நீராட்டுவிழவிற்குவேண்டிய சாந்து முதலியவற்றை யுடையவாய் நீரிலே
நின்ற பல்வேறு தோணிகளும் அவர்கள் நீராட்டின் எழுந்த அலைகளான் அலைப்புண்டு
ஒன்றனோடொன்று தாக்கித் திரியும் என்றவாறு. தாக்குபு - தாக்கி.
|
( 117 ) |