| குணமாலையார் இலம்பகம் |
559 |
|
|
கொண்ட மன்றல் ஒத்து - நிலமிசை வானவர்கொண்ட மணம் போல; ஓடிஇறந்தது - (அவ்விரு திறத்தாரும்) சோர்ந்த பிறகு நீர்விளையாட்டுக்) கழிந்தது.
|
|
|
(வி - ம்.) வண்ண ஒண் சுண்ணம் - நன்னிறமும் ஒளியும் உடைய நறுமணப் பொடி. மீன்கள் மைந்தர்க்கும் நுடங்குமின் மகளிர்க்கும் உவமையாகக் கொள்க. மன்றல் - திருமணம். இந்நீராட்டு விழா தேவர் திருமண விழாப் போன்றிருந்தது என்பது கருத்து.
|
( 119 ) |
வேறு
|
|
| 970 |
உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமு |
| |
மரைத்த சாந்தமு நானமு மாலையு |
| |
நுரைத்து நோன்சிறை வண்டொடு தேனின |
| |
மிரைத்து நீர்கொழித் தின்ப மிறந்ததே. |
|
|
(இ - ள்.) உரைத்த எண்ணெயும் - தேய்த்துக்கொண்ட எண்ணெயும்; ஒள் நறுஞ் சுண்ணமும் - சிறந்த சுண்ணப் பொடியும்; அரைத்த சாந்தமும் - அரைத்த சந்தனமும்; நானமும் மாலையும் - கத்தூரியும் மாலைகளுமாக; நுரைத்து - நுரை செய்து ; நோன்சிறை வண்டொடு தேன் இனம் இரைத்து - வலிய சிறகுகளையுடைய வண்டும் தேன் இனமும் முரன்று; கொழித்து - தெளிவுடையதாய்; நீர் இன்பம் இறந்தது - நீர் இனிமை மிகுந்தது.
|
|
|
(வி - ம்.) உரைத்த முதலிய பெயரெச்சங்கள் செயப்படுபொருளன.
|
|
|
உரைத்த - உரைக்கப்பட்ட; அரைத்த - அரைக்கப்பட்ட, நுரைத்து - நுரைக்கப்பட்டு, இரைத்து - இரைக்கப்பட்டென இவ்வெச்சங்களை செயப்பாட்டு எச்சங்ளாகக் கொள்க. இன்பம் இறந்ததே என்பதற்குத் தனது நலமிழந்தது எனலுமாம். என்னை? நீராடியபின் அந்நீர் உண்ணவும் ஆடவும் தகுதியற்றதாகும் என்பதே பரிபாடலினும் காணப்பட்டது ஆகலான் என்க.
|
|
| |
”கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் |
| |
| |
வழிநீர் விழுநீர அன்று வையை” |
| |
|
என்பது பரிபாடல்.
|
( 120 ) |
வேறு
|
|
| 971 |
கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்ன |
| |
வித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி |
| |
முத்தணிந் தாவி யூட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப் |
| |
பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே. |
|