பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 588 

1027 திருந்துவேற் சீவக சாமி யோவெனுங்
கருங்கடல் வெள்வளை கழல்ப வோவெனும்
வருந்தினேன் மார்புறப் புல்லு வந்தெனும்
பொருந்துபூங் கொம்பன பொருவின் சாயலே.

   (இ - ள்.) பொருந்து பூங்கொம்பு அன பொருஇன் சாயல் - பொருந்திய பூங்கொம்பு போன்ற உவமை கூறற்கு இனிய மென்மையுடைய என் தலைவி; திருந்துவேல் சீவகசாமியோ ! எனும் - திருந்திய வேலேந்திய சீவகசாமியே! என விளிப்பாள் ; கருங்கடல் வெள்வளை கழல்ப ஓ எனும் - கரிய கடலிற் பிறந்த வெள்ளிய வளைகள் கழல்வவாயின்! ஓ ! என வருந்துவாள் ; வருந்தினேன் மார்புற வந்து புல்லு எனும் - (நின்னுருவெளியைத் தழுவி அகப்படாமையின்) யான் தழுவி வருந்தினேன்; இனி நீ வந்து மார்புறத் தழுவிக்கொள் என்பாள்.

 

   (வி - ம்.) யானை கொல்லாமல் உயிரைக் காத்த வருத்தம் இன்று உடம்பைக் காத்தற்கரியதோ என்று கருதி, 'வளை கழல்பவோ' என்றாள்.

 

   நச்சினார்க்கினியர் 1025 - 1027 ஆகிய மூன்று பாட்டுகளையும் ஒரு தொடர்ப்படுத்திக் கொண்டு கூட்டும் முடிபு:-

 

   ”பாவைதான் கோலத்தையும் பந்தையும் பாராளாய் ஆடலளாய் விளர்த்து யாழையும் உணவையும் விட்டு நீங்கி, உறக்கத்தையும் விட்டாள்; இத்தன்மையே யன்றி உயிரும் நீங்குமோ என்று கருதிப் பூம்படுக்கையாகிய நெருப்பிலே கிடந்து பார்க்கும்; அதினும் உயிர் நீங்காமையின் , தூணைப் பற்றுக்கோடாகப் பொருந்தி நின்றும் பார்க்கும்; வருந்தக் குறிப்புத் தோன்றி ஐயெனக் கூறிப்போய்ப் பல்கால் ஆவித்து நெட்டுயிர்ப்புக் கொள்ளா நிற்கும்; பின்பு அதுவுமின்றி நிலமிசை மெல்ல இருக்கும் ; அங்ஙனமிருந்து, சாயலை உடையாள், 'சீவகசாமி ! வளைகழல அமையுமோ' எனும்; 'நின் உருவம் வெளிப்பட்டதனைப் பல்காலும் சென்று புல்லி, அது தன் எதிர் புல்லாமையின், யான் புல்லி வருந்தினேன்; இனி, நீ தான் வந்து மார்புறும்படி புல்'லென்னும்; அது காணாமையின் ஓ என்று வருந்தும்.”

( 177 )
1028 கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்கும்ஃ
தின்னதென் றுரையலர் நாணி னாதலான்
மன்னும்யா னுணரலேன் மாத ருற்றநோய்
துன்னிநீ அறிதியோ தோன்ற லென்றதே.

   (இ - ள்.) கன்னியர் உற்றநோய் இன்னதென்று கண்ணனார்க்கும் நாணின் உரையலர் ஆதலான் - கன்னிப் பெண்கள் தாம் அடைந்த காமநோய் இத்தகையதென்று கண்ணைப் போன்றவர்கட்கும் நாணத்தினால் மொழியார்; ஆகையால் (எனக்கும் உரையாள்); மன்னும் யான் உணரலேன் - யான் பறவை