| குணமாலையார் இலம்பகம் |
594 |
|
|
வாராரோ என்றையுற்றவர் விரலால் வட்டமாகக் கோடு கிழித்து அக்கோட்டின் இருமுனைகளும் ஒன்று கூடியவிடத்து வருவர் என்றும் கூடாமல் விலகியவழி வாரார் என்றும் துணிதல் என்க.
|
( 187 ) |
| 1038 |
பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற் |
| |
கேகுமா லாவி யெனநினைப்பப் பைங்கிளியார் |
| |
மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தா |
| |
ளாகும்யான் சோ்வ லெனச்சென் றடைந்ததே. |
|
|
(இ - ள்.) பாகவரை வாங்கி - (அங்ஙன மிழைப்பவள்) பாதிவரையில் வளைத்து; பழுதாகின் பாவியேற்கு ஆவி ஏகும் - இது கூடாதாயின் பாவியேனுக்கு உயிர் நீக்கும்; என நினைப்ப - என்றெண்ணிக் (கூடற்சுழியை முடியாமலே வானிற் கிளி வரவை நோக்கி வாளா இருப்ப); மாகமே நோக்கி - வானையே நோக்கி ; அவ்விருந்தாள் யார்? மடவாளே ஆகும் - அங்கிருந்தாள் யார்? (வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் வேறொருத்தி இங்கிராள் ஆகையால்) குணமாலையே ஆவாள்; யான் சேர்வல் என - யான் இனி அவளிடஞ் செல்வேன் என எண்ணி ; பைங்கிளி சென்று அடைந்தது - பசுங்கிள்ளை போய்ச் சேர்ந்தது.
|
|
|
(வி - ம்.) 'குணமாலை மாகமே நோக்கியும் கன்னிமாடத்திலும் இருந்ததால், மெய்வாடி, வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் கிளி அறிந்தது' எனக் குணமாலையின் காதல் நிலை கூறியவாறு. தான் போனபின்புள்ள வேறுபாட்டால் ஐயுற்றாலும் வருத்த மிகுதி கண்டு கிளி தெளிந்தது.
|
( 188 ) |
| 1039 |
கண்டா ணெடிதுயிர்த்தாள் |
| |
கைதொழுதாள் கையகத்தே |
| |
கொண்டா டினைக்குரறான் |
| |
சூடினாள் தாழ்குழன்மே |
| |
னுண்டார்ப் பசுங்கிளியை |
| |
நோவ அகட்டொடுக்கி |
| |
வண்டாரான் செவ்விவாய்க் |
| |
கேட்டாடன் மெய்ம்மகிழ்ந்தாள். |
|
|
(இ - ள்.) கண்டாள் - (தன்னை அணுகின கிளியைக்) கண்டாள் ; நெடிது உயிர்த்தாள் - (இது என்னுரைக்குமோ என்று) பெருமூச் செறிந்தாள்; கைதொழுதாள் - (கிளியின் வாயில் தினைக்கதிரைக் கண்டு அதிலே ஓலையிருக்கும் என்று துணிந்து) கைகுவித்து (நல்லூழை) வணங்கினாள்; கையகத்தே தினைக்குரல் கொண்டாள் - கையிலே தினைக்கதிரை வாங்கிக் கொண்டாள்; தாழ்குழல் மேல் சூடினாள் - நீண்ட கூந்தலிலே
|
|