பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 596 

   (இ - ள்.) கொடுஞ்சிலையான் ஓலை - வளைந்த வில் ஏந்திய சீவகன் விடுக்கும் ஓலை; குணமாலை காண்க - குணமாலை காண்பாளாக, அடும் துயரம் உள்சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற - காமநோய் உள்ளத்தைச் சுடுதலாலே வெந்து ஆற்றாதன் நான் ஆற்றுமாறு; விடுந்த சிறுகிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன் - தான் வரவிட்ட சிறுகிளியினால் யான் மிக்க வருத்தத்திலிருந்து நீங்கினேன்; நெடுங்கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக - நீண்ட கண்களையுடைய அவளும் வருத்தமிகா தொழிவாளாக.

 

   (வி - ம்.) 'கொடுஞ்சிலையான்' எனத் தற்புகழ்தல் தகுமென்பதை முன்னரே (சீவக. 1031) கூறினாம். 'இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் முறைமை. விடுந்த : விட்ட என்பதன் விகாரம்.

 

   கொடுஞ்சிலையான் என்றது சீவகன் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது.

( 191 )
1042 ஈட்டஞ்சா னீணிதியு மீர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ்
மோட்டு வளஞ்சுரக்கு மூரு முழுதீந்து (மென்றோட்
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்
பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே.

   (இ - ள்.) ஈட்டம்சால் நீள்நிதியும் - அறத்திற் சேர்க்கப் பட்ட பெருஞ் செல்வத்தையும்; ஈர்ங்குவளைப் பைந்தடம் சூழ் மோட்டுவளம் சுரக்கும் ஊரும் - தண்ணிய குவளை நிறைந்த பசுந்தடங்கள் சூழ்ந்து உயரிய செல்வத்தைப் பெருக்கும் ஊரையும் ; முழுது ஈந்து- (குரவர் விரும்பியவாறு) முற்றவும் நல்கி ; பூட்டு ஆர் சிலை நுதலாள் - பூட்டப்பட்ட வில்லனைய புருவத்தாளின், வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய - விரும்பினார்க்கு விரும்பினவை போல, இனிமையான ; வேய்மென் தோள் - மூங்கில் அனைய மெல்லிய தோள்களை ; புல்லாது ஒழிவேனே - தழுவாமல் விலகுவேனோ?

 

   (வி - ம்.) ”சிலைநுதலாளைத் தோளைப் புல்லாதொழியேன்” எனக் கூட்டி நச்சினார்க்கினியர் பொருள் கொண்டார். இங்ஙனம் இரண்டனுருபு முதலுககும் சினைக்கும் வருதல் ”முதன்முன் ஐவரின்” என்ற சூத்திரத்தில், 'தௌ்ளிது' (தொல். வேற்றுமை மயங். 5) என்பதனாற் கொள்க.

 

   ஈட்டஞ்சால் என்றது, அறத்தால் ஈட்டமமைந்த என்பது படநின்றது. நீள்நிதி - பெருஞ்செல்வம். மோட்டுவளம் - பெருவளம்.

 
  ”வேட்டபொழுதின் அவையவை போலுமே  
  தோட்டார் கதுப்பினாள் தோள்” (குறள்: 1105)  

   என்றார் திருவள்ளுவனாரும்.

( 192 )