பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 599 

   (வி - ம்.) குழலினாளை - குணமாலையை. அவ்வை - தாய். அவ்வைக்கு - மூத்தவனான நின் மாமன் என்க. நகைமுகவிருந்து என்றது உடன்பாடு என்னும் பொருளின்மேனின்றது. நின்னைக் கொடுப்பதாக உடன்பட்டான் என்பது கருத்து.

( 196 )
1047 பண்டியாற் பண்டி செம்பொன்
  பல்வளை பரிய மாகக்
கொண்டுவந் தடிமை செய்வான்
  குறையுறு கின்ற தன்றிக்
கண்டவர் கடக்க லாற்றாக்
  கிழிமிசை யுருவ தீட்டி
வண்டிமிர் கோதை நின்னை
  வழிபடு நாளு மென்றாள்.

   (இ - ள்.) பல்வளை! வண்டு இமிர் கோதை! - பல்வளைகளை உடையாய்! வண்டுகள் முரலும் கோதையாய்! ; பண்டியால் பண்டி செம்பொன் பரியமாகக் கொண்டு வந்து - நின் மைத்துனன் வண்டியாலே ஒரு வண்டி செம்பொன் பரிசமாகக் கொணர்ந்து ; அடிமை செய்வான் குறையுறுகின்றது அன்றி - நினக்குப் பணிபுரியக் குறையுற்று நிற்பதே அன்றி; கண்டவர் கடக்கல் ஆற்றா உருவு கிழிமிசை தீட்டி - பார்த்தவர் பார்வையை விட்டுக் கடந்துபோக இயலாத நின் வடிவத்தைக் கிழியிலே வனைந்து; நின்னை நாளும் வழிபடும் என்றாள் - உன்னை எப்போதும் வழிபடுவான் என்று கூறினாள்.

 

   (வி - ம்.) பல்வளை; அன்மொழித்தொகை, விளியேற்று நின்றது. கோதை : விளி. பண்டி - வண்டி. கண்டவர் கடக்கலாற்றா உருவு - என்பதனை ”ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ” என்னும் மணிமேகலையோடு ஒப்புக்காண்க.

( 197 )
1048 மைத்துனன் வனப்பின் மிக்கான்
  வளர்நிதிக் கிழவன் காளை
யுத்தம னுனது நாம
  மல்லதொன் றுரைத்த றேற்றா
னித்திறத் திவன்க ணின்னை
  யெண்ணினா ரென்ன லோடுந்
தத்தையங் கிளவி கையாற்
  செவிமுத லடைச்சிச் சொன்னாள்.

   (இ - ள்.) மைத்துனன் வனப்பின் மிக்கான் - மேலும் நின்மைத்துனன் அழகிற் சிறந்தவன் ; வளர்நிதிக் கிழவன் - பெருஞ் செல்வத்துக்குரியவன் ; காளை - இளைஞன்; உத்தமன் - நல்ல