பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 618 

1081 சண்பக மாலை வேய்ந்து
  சந்தனம் பளிதந் தீற்றி
விண்புக நாறு சாந்தின்
  விழுமுலைக் காம வல்லி
கொண்டெழுந் துருவு காட்டி
  முகத்திடைக் குளித்துத் தோண்மேல்
வண்டளி ரீன்று சுட்டி
  வாணுதல் பூப்ப வைத்தான்.

   (இ - ள்.) சண்பக மாலை வேய்ந்து - சண்பக மாலையைச் சூட்டி ; சந்தனம் பளிதம் தீற்றி விண்புக நாறு சாந்தின் - சந்தனத்தையும் பச்சைக் கருப்பூரத்தையும் கலந்து வானளாவ மணக்கும் சந்தனக் குழம்பினாலே; காமவல்லி விழுமுலைக் கொண்டு எழுந்து - காமவல்லியானது சிறந்த முலையை அடியாகத் தொடங்கி எழுந்து; உருவு காட்டி - தனது உருவத்தைக் காட்டி; தோண்மேல் வண்தளிர் ஈன்று - தோளின்மேல் வளவிய தளிரை நல்கி ; முகத்திடைக் குளித்து - முகத்திலே மறைந்து போய் ; வாள்நுதல் சுட்டி பூ வைத்தான் - ஒள்ளிய நெற்றீயிலே சுட்டியாக மலருமாறு எழுதினான்.

 

   (வி - ம்.) பளிதம் - பச்சைக் கருப்பூரம். தீற்றுதல் - பூசுதல். விழுமுலை - சிறந்த முலை. காமவல்லி - கற்பக மரத்திற் படருமொரு பொன்னிறப் பூங்கொடி. அக்கொடியின் உருவத்தைச் சீவகன் குணமாலை முலைமேல் எழுதினன் என்க.

( 231 )
1082 பண்ணடி வீழுந் தீஞ்சொற்
  பாவைநின் வனப்பிற் கெல்லாங்
கண்ணடி கருங்க ணென்னு
  மம்பறாத் தூணி தன்னாற்
புண்ணுடை மாம்பத் தோவா
  தெய்தியா லெங்குப் பெற்றாய்
பெண்ணுடைப் பேதை யென்றோர்
  நாண்முற்றும் பிதற்றி னானே.

   (இ - ள்.) பண்அடி வீழும் தீசொல் பாவை - பண் தோற்று அடியிலே வணங்கும் இனிய மொழிகளையுடைய பாவையே !; வனப்பிற்கு எல்லாம் கண்ணடி - அழகிற்கெல்லாம் கண்ணாடி போன்றவளே!; நின் கருங்கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால் - நின் கரிய கண்களாகிய அம்பறாத்தூணியில் நோக்கமாகிய அம்பினால் ; புண்உடை மார்பத்து ஓவாது எய்தி - (பழைய)