| குணமாலையார் இலம்பகம் |
626 |
|
|
பெருவலி படைத்த சீவகன் ; பிணிக்கப்பட்டான் - கட்டப் பட்டான்.
|
|
|
(வி - ம்.) இன் : உவமப் பொரு. இங்கு, 'அச் சொல் கயிற்றாற் பிணித்தாற் போல மனத்தைப் பிணித்தது. ஈண்டு, இவர் கட்டிற்றில ரெனவே இளையரான் (ஏவலரால்) மேற்கட்டலாகாமையும் உணர்க' என்று உணர்க என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 241 ) |
வேறு
|
|
| 1092 |
குழலுடைச் சிகழிகைக் குமரன் றோளிணை |
| |
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலி |
| |
னழலுடைக் கடவுளை யரவு சோ்ந்தென |
| |
விழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே. |
|
|
(இ - ள்.) குழலுடைச் சிகழிகைக் குமரன் தோளிணை - குழற்சியாகிய முடியினையுடைய சீவகன் தோளிணைகளை ; அழல் உடை கடவுளை அரவு சேர்ந்தென - ஞாயிற்றைப் பாம்பு சேர்ந்தாற்போல ; கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின் - கழலணிந்த ஏவலர் கச்சினாற் கட்டியதால் ; விழவுடை முதுநகர் விலாவிக்கின்றது - திருவிழா மலிந்த பழம்பதி அழாநின்றது.
|
|
|
(வி - ம்.) இங்கும் நசசினார்க்கினியர், 'வீக்கலின்' என்பதிலுள்ள 'இன்: உவமப்பொரு' என்றும் பாம்பு ஞாயிற்றை ஒளி குறைய மறைத்தாற்போல இவரும் இவன் ஒளி குறையுமாறு சிறையாகக் கொண்டாரென்க. மனத்தை இறுகப் பிணிக்கவே தோளைப் போர்த்தொழிலை விலக்கிற்றாம்' என்றும் விளக்கங் கூறுவர்.
|
|
|
மற்றும் அவர், 'குமரன் தோளிணைகளைக் குரவர் அங்ஙனங் கச்சிட்டுக் கட்டினாற்போலப் போர்த்தெ்ழில் செய்யாதபடி விலக்கினார்களாக, வந்த இளையவர் ஞாயிற்றை அரவம் சேர்ந்தென்னச் சேர்தலின்' என்று பொருள் கூறுவர்.
|
( 242 ) |
வேறு
|
|
| 1093 |
தோளார் முத்துந் தொன்முலைக் கோட்டுத் துயன்முத்தும் |
| |
வாளா ருண்கண் வந்திழி முத்தும் மிவைசிந்தக் |
| |
காளாய் நம்பி சீவக சாமி யெனநற்றாய் |
| |
மீளாத் துன்ப நீள்கடன் மின்னின் மிசைவீழ்ந்தாள். |
|
|
(இ - ள்.) தோள் ஆர் முத்தும் - தோளில் அணிந்த முத்துக்களும்; தொல்முலைக் கோட்டுத் துயல் முத்தும் - முதிய முலைச் சிகரத்திலே அசையும் வடத்திலுள்ள முத்துக்களும் ; வாள்ஆர் உண்கண் வந்து இழிமுத்தும் - வாளனைய மையுண்ட கண்களிலிருந்து வந்து சிந்தும் கண்ணீராகிய முத்துக்களும்;
|
|