| குணமாலையார் இலம்பகம் |
635 |
|
|
என்பார் - இன்றோடு புனையும் நலனும் அழகும் கல்வியும் அழியும் என்பார் ; எம் மனங்கள் வனைகலத் திகிரிபோல மறுகும் என்பார் - எம் உள்ளங்கள் எல்லாம் குயவன் பானை வனையும் சக்கரம்போலச் சுழலும் என்பார்.
|
|
|
(வி - ம்.) விணை - ஈண்டுத் தீவினை. வினையது விளைவு என்றது ; ”இம்மைச் செய்தது யாமறி நல்வினை இஃது உம்மைப் பயன்கொல்' என்பது படநின்றது.
|
( 258 ) |
| 1109 |
நோற்றிலர் மகளி ரென்பார் |
| |
நோங்கண்டீர் தோள்க ளென்பார் |
| |
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் |
| |
குலத்தொடு முடியு மென்பா |
| |
ரேற்றதொன் றன்று தந்தை |
| |
செய்தவிக் கொடுமை யென்பா |
| |
ராற்றலள் சுநந்தை யென்பா |
| |
ராதகா தறனே யென்பார். |
|
|
(இ - ள்.) மகளிர் நோற்றிலர் என்பார் - இவன் கிடைத்தும் நெடுங்காலம் நுகர்தற்கு மனைவியரிருவரும் நோற்றிலர் என்பார் ; தோள்கள் நோம்கண்டீர் என்பார் - தோள்கள் வருந்தும் என்பார்; கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடும் முடியும் என்பார் - கூற்றுவனைக் கைதட்டியழைத்துக் குலத்தோடும் (அரசன்) முடிவான் என்பார்; தந்தை செய்த இக் கொடுமை ஏற்றது ஒன்று அன்று என்பார் - தந்தை காட்டிக் கொடுத்த இக் கொடிய செயல் தக்கது ஆகாது என்பார் ; சுநந்தை ஆற்றலள் என்பார் - (இனி) சுநந்தை இத் துயரத்தைப் பொறுக்கமாட்டாள் என்பார்; ஆ! தகாது அறனே! என்பார் - ஆ! இது தக்கதன்று! அறக்கடவுளே! என்பார்.
|
|
|
(வி - ம்.) 'யாம் உளேமாகவும் எம்மாற் பயன் கொளாது இவன் இங்ஙனம் சிறைவாய்ப் போவதே என்று தோள்களும் தம்மில் நோம்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
|
| |
”கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்(கு) |
|
| |
ஆற்றாதார் இன்னா செயல்.” |
|
|
என்னுந் திருக்குறளை நினைக. மூன்றனைத் துலகமெல்லாம் முட்டினும் முருக்குமாற்றல் உடையன் என்பது பற்றி இங்ஙனம் கூறினர்
|
( 259 ) |
| 1110 |
தூக்குமின் காளை சீறிற் றுற்றிவ னுளனோ வென்பார் |
| |
காக்குமால் வைய மெல்லாங் காவல னாகி யென்பார் |
| |
பாக்கயம் பெரிது மேகா ணிதுவுமோர் பான்மை யென்பார் |
| |
நோக்கன்மி னாணுங் கண்டீர் நுதிகொ ணாகரிக னென்பார். |
|