| குணமாலையார் இலம்பகம் |
637 |
|
|
தோட்கு இது தகாது என்று - பெரிய வில் பழகிய திண்ணிய தோள்களுக்குக் (கட்டுப்படும்) இஃது ஏற்காது என்றுரைப்பதால்; கருங்கடல் குன்றில் துளுப்பிட்டாங்கு - கரிய கடல் மலையாலே கலக்குற்றாற்போல ; கல் எனக் கலங்கி - கல்லென்னும் ஒலியுடன் கலங்கி ; காமர் அருங்கடி அரணம் மூதூர் - அழகிய, அரிய காவலான அரண்களையுடைய இராசமாபுரம் ; ஆகுலம் மயங்கிற்று - துன்பக் குரலால் மயங்கியது.
|
|
|
(வி - ம்.) 'நிரை மீட்ட தோள்' என்றார் ஆண்டுக் கொல்லாமலே வென்றாற்போல ஈண்டும் கொல்லாமலே வெல்ல வல்லன் என்பது கருதி.
|
( 262 ) |
| 1113 |
இங்கன மிவர்க ளேக |
| |
வெரியகம் விளைக்கப் பட்ட |
| |
வெங்கணை விடலை தாதை |
| |
வியனக ரவல மெய்தி |
| |
யங்கவ ருகுத்த கண்ணீ |
| |
ரடித்துக ளவிப்ப நோக்கிப் |
| |
பொங்கம ருழக்கும் வேலான் |
| |
புலம்புகொண் டழேற்க வென்றான். |
|
|
(இ - ள்.) இங்கனம் இவர்கள் ஏக - இவ்வாறு இவர்கள் துயருற்றுச் செல்ல; எரியகம் விளைக்கப்பட்ட வெங்கணை விடலை தாதை - தீயில் விளைவிக்கப்பட்ட கொடிய கணை ஏந்திய சீவகன் தந்தையினுடைய; வியன் நகர் அவலம் எய்தி - பெரிய மனையிலுள்ளார் துன்பம் அடைந்து ; அங்கு அவர் உகுத்த கண்ணீர் - அவர்கள் சிந்திய கண்ணீர் ; அடித்துகள் அவிப்ப நோக்கி - செல்கின்றவரின் அடித் துகளை அவித்தலாலே, அவர்களை நோக்கி; பொங்கு அமர் உழக்கும் வேலான் - கிளர்ந்த போரைக் கலக்கும் வேலேந்திய சீவகன் ; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - புலம்புதல் கொண்டு அழாதீர் என்றான்.
|
|
|
(வி - ம்.) 'எரியை உள்ளே விளைத்த வெங்கணை' எனினும் ஆம். இவன் குணமாலை மனையினின்றும் போந்தான் ; தந்தை மனையில் உள்ளார் புலம்புவதைப் பார்த்தான். ”தாதையினதுவியனகர்” என ஆறாம் வேற்றுமையை விரித்துக் கொள்க.
|
( 263 ) |
| 1114 |
மின்னினான் மலையை யீர்ந்து |
| |
வேறிரு கூறு செய்வான் |
| |
றுன்னினான் றுளங்கி னல்லாற் |
| |
றுளங்கலம் மலையிற் குண்டே |
|