| குணமாலையார் இலம்பகம் |
642 |
|
|
நிமிர்ந்து - நிமிர்ந்து அமர்ந்து; திண்தோள் ஊழ்பிணைந்து - திண்ணிய தோளில் கையோடு கைமாறி ஏறத் தட்டி ; உருமின் சீறி - இடியென முழங்கி ; உடல்சினம் கடவச் சொன்னான் - மாறுபடும் சீற்றம் உந்த அரசன் கூறினான்.
|
|
|
(வி - ம்.) பீழை: பிழையின் விகாரம். 'மாநிரை பெயர்த்த காளை' என்றான் மாநிரை பெயர்த்தது அரசனுக்குற்ற வடுவை நீக்கலும் அறமும் ஆகி நின்றதுபோல இதுவும் ஆகும் எனக் கருதிச் செய்தான் என்பது தோன்ற.
|
|
|
நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் இதனையும் ஒரு தொடராக்கி, 'இன்னதே குற்றமாயின் குணமினி யாது?' என்றதற்கு முகம் ஆகாமை கண்டு, மகளிர் நடுக்கத்தை நீக்கல் ஆண்மக்கள் கடனென்று தோற்றானாய்த் தான் பெயர்த்த மாநிரையென்றெண்ணி, அறிவின்மையாலே துணிந்த குற்றத்தைப் பொறுப்பாய் என்றான் ; பின்னும் செவ்வி பெறாமையின் தொன்றுதொட்டு வ்ந்த பொருள் எலாம் தருவேன்; எனக்காகப் பொறுப்பாயாக' என்றான், - எனக் கொண்டு கூட்டுவர்.
|
( 270 ) |
| 1121 |
ஆய்களிற் றசனி வேக |
| |
மதன்மருப் பூசி யாகச் |
| |
சீவக னகன்ற மார்ப |
| |
மோலையாகத் திசைகள் கேட்பக் |
| |
காய்பவன் கள்வ ரென்ன |
| |
வெழுதுவித் திடுவ லின்னே |
| |
நீபரி வொழிந்து போய்நின் |
| |
னகம்புகு நினைய லென்றான். |
|
|
(இ - ள்.) ஆய்களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக - அவனாற் சோர்வுற்ற களிறாகிய அசனி வேகத்தின் கொம்பு ஊசியாகவும் ; சீவகன், அகன்ற மார்பம் ஓலைஆ - சீவகனுடைய விரிந்த மார்பு ஓலையாகவும் கொண்டு ; திசைகள் கேட்ப - திசைகள் அறியுமாறு ; கள்வர் காய்பவன் என்ன - கள்வரைக் கொல்லுவேன்போல ; இன்னே எழுதுவித்திடுவல் - இப்போதே எழுதுவிப்பேன் ; நீ பரிவு ஒழிந்துபோய் - நீ வருத்தம் நீங்கிச் சென்று ; நின் அகம்புகு - நின் மனையை அடைக ; நினையல் என்றான் - இதனை நினையாதே என்றான்.
|
|
|
(வி - ம்.) 'திசைகள் கேட்ப' என்றான் வெள்ளிமலைக்கும் இவனால் வெல்லப்பட்ட அரசருக்கும் அறிவிப்பேன் என்னுங் கருத்துடன். கொல்லுதலை எழுதுவிப்பேன் என்றான், அசனி வேகம் என்னும் களிற்றின் கொம்பை ஊசியாகக்கொண்டு சீவகன் மார்பினை ஓலையாக வைத்து எழுதுவேன் என்றது கொல்வேன் என்பதைக் குறித்தது.
|
( 271 ) |