பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 650 

   (இ - ள்.) திருக்குழல் மகளிர் நைய - அழகிய குழலையுடைய மகளிர் வருந்துமாறு ; மன்னனால் சீவகசாமி திண்தோள் வரிக்கச்சின் பிணிக்கப்பட்டான் - அரசனாற் சீவகன் தன் திண்ணிய தோள்கள் வரிதலையுடைய கச்சினாற் கட்டப்பட்டான் ; என்னக் கேட்டு - என்று கேள்வியுற்று ; மன் உயிர்த் தோழன் மார் - நிலைபெற்ற உயிரனைய தோழர்கள் ; வாள்ஆர் ஞாட்பினுள் - வாளேந்திச் செய்யும் போரிலே ; தருக்கு உடைவேழம் - செருக்குற்ற களிறு ; தகைமை சான்ற மருப்பு உடன் இழந்தது ஒத்தார் - சிறப்புற்ற மருப்புகளைச் சேர இழந்தனைப் போன்றனர்.

 

   (வி - ம்.) இங்கும் நச்சினார்க்கினியர், 'தன் தோளை இருமுது குரவராலே கச்சினாற் கட்டினாற் போலத் தொழில் செய்யாதபடி பண்ணப்பட்டான்' என்பர்.

( 283 )
1134 நட்டவற் குற்ற கேட்டே
  பதுமுக னக்கு மற்றோர்
குட்டியைத் தின்ன லாமே
  கோட்புலி புறத்த தாகக்
கட்டியங் கார னென்னுங்
  கழுதைநம் புலியைப் பாய
வொட்டியிஃ துணர லாமே
  யுரைவல்லை யறிக வென்றான்.

   (இ - ள்.) நட்டவற்கு உற்ற கேட்டு - தன் நண்பனுக்கு நேர்ந்தவற்றைக் கேட்டு ; பதுமுகன் நக்கு - பதுமுகன் நகைத்து; கோள் புலி புறத்தது ஆகக் குட்டியைத் தின்னல் ஆமே?- கொல்லவல்ல புலி காத்துக்கொண்டிருக்க (மற்றொன்றாற்) குட்டியைத் தின்ன இயலுமோ? இயலாது ; கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியைப் பாய - கட்டியங்காரன் எனப்படுங் கழுதை நம் புலியைப் பாய்வதற்கு ; ஒட்டி இஃது உணரலாமே?- நாமும் மெய்யென்று நம்பிப் பொருந்தி உணர்த்ல் ஆகாது ; உரைவல்லை அறிக என்றான் - உரைவல்லவனே! இதனை அறிந்து வருக என்று ஒற்றனிடம் கூறினான்.

 

   (வி - ம்.) தான் காத்தற் றொழிலையுடைமையின் குட்டியென்றான். 'மடங்கலாற்றற் பதுமுகன் காக்க' (சீவக. 1896) காண்க.

( 284 )
1135 சிலையொடு செல்வ னின்றாற்
  றேவரும் வணக்க லாற்றார்
முலையுடைத் தாயோ டெண்ணித்
  தந்தையிக் கொடுமை செய்தான்
கலைவல்லீ ரின்னுங் கேண்மி
  னின்னதென் றுரைக்கு மாங்கண்
விரைவொடு சென்ற வொற்றாள்
  விளைந்தவா பேசு கின்றான்.