பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 656 

1143 மாற்றவர் மலைப்பி னாங்கே
  வாட்கடாக் கொண்டு நொய்தா
வேற்றுல கேற்றி நும்பின்
  விரைதர்வே னுலகிற் கெல்லா
மாற்றிய நட்பு வல்லே
  வலிப்புறீஇ யிடுமி னென்றான்
கூற்றங்கள் பலவுந் தொக்க
  கூற்றத்திற் கூற்ற மொப்பான்.

   (இ - ள்.) கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான் - கூற்றுக்கள் பலவுந் திரண்ட கூறுபாட்டிலே சிறந்த கூற்றத்தைப் போன்றவனான பதுமுகன் ; மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடாக் கொண்டு - (அவ்வாறு மிளையிற் புகுந்தால்) பகைவர்கள் மலைவதுண்டாயின், வாளாலே கடாவிட்டு; நொய்துஆ வேறு உலகு ஏற்றி நும்பின் விரைதர்வேன் - விரைவாக விண்ணுலகினேற்றி உம்முடன் விரைந்து வருவேன்; ஆற்றிய நட்பு உலகிற்கு எல்லாம் வலிப்பு உறீஇ இடுமின் என்றான் - நீங்கள் நடத்திய நட்பை உலகெல்லாம் நிலைபெறுத்தியிடுமின் என்றான்.

 

   (வி - ம்.) 'கூற்றத்தில் உவமை கூறுமிடத்துப் பல கூற்றங்களாலே பண்ணினதொரு கூற்றம் ஒப்பான்' என்றுமாம்.

 

   கடாக்கொள்ளுதலாவது எருதுகளால் வைக்கோலைத் துவைத்தல் போன்று பகைவரைப் போர்க்களத்தே துவைத்தழித்தல் என்க.

 
  ”கடாவிடு களிறுபோல உச்சியும்  
  மருங்கும்பற்றிப் பிளந்துயிர் பருகி”.  

   என்பர் பின்னும் (1153) . விரைதருவேன் என்பது விரைதர்வேன் என உகரம் கெட்டுநின்றது.

( 293 )
1144 காலனைச் சூழந்த நோய்போ னபுலமா விபுலர் சூழ
வேலினை யேந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடு
மாலைதன் றாதை தானு மக்களும் வந்து கூடிப்
பாலவர் பிறரு மீண்டிப் பாய்புலி யினத்திற் சூழ்ந்தார்.

   (இ - ள்.) காலனைச் சூழ்ந்த நோய்போல் நபுலமா விபுலர் சூழ - காலன் ஏவினவாறு செய்ய அவனைச் சூழ்ந்த நோய்போல நபுலனும் விபுலனும் ; மாவின் மேற்சூழ ; நந்தன் வேலினை ஏந்தி - நந்தட்டன் வேலேந்தியவனாய் வெருவரத் தோன்றலோடும் - அச்சமுண்டாகத் தோன்றின அளவிலே ; மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி - குணமாலையின் தந்தையும்