பக்கம் எண் :

                                 
குணமாலையார் இலம்பகம் 660 

   (வி - ம்.) என்னை : ஐ : அசை. ஆவது : ஒருமைப் பன்மை மயக்கம்.

 

இச் செய்யுள்,

 
  ”அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ  
  எல்லை நீத்த உலகங்கள் யாவுமென்  
  சொல்லி னாற்சுடு வேனது தூயவன்  
  வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்” (கம்ப- சூளாம- 18)  

   என்னும் சீதையின் கூற்றை நினைப்பிக்கின்றது.

( 299 )
1150 செல்வனுற் றசிறை செய்யவ ணீக்குமென் றாற்பழி
யில்லையா யின்னவள் யானெனும் வேற்றுமை யில்லையே
சொல்லின்வெள் ளிம்மலை தோடவிழ் தாமரைப் பொன்மல
ரெல்லையா கும்பொதுப் பெண்ணவள் யான்குல மங்கையே.

   (இ - ள்.) செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் - செல்வன் அடைந்த சிறையைத் திருமகள் நீக்குவாளாயின்; பழி இல்லை ஆயின் - பழியில்லை யென்றால் ; அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே - அவளென்றும் யானென்றும் வேறுபாடு இல்லையே, சொல்லின் - வேற்றுமை கூறின் வெள்ளிமலை தோடு அவிழ் பொன் தாமரை மலர் எல்லை ஆகும் - எனக்கு வெள்ளிமலையும் அவளுக்கு இதழ்விரிந்த பொற்றாமரை மலரும் எல்லை ஆகும் ; அவள் பொதுப்பெண் - (மற்றும்) அவளோ பொதுமகள் ; யான் குலமங்கை - யானோ குலப்பெண். (ஆகையாற் பழியில்லையாம்).

 

   (வி - ம்.) திருமகள் பார்க்கின் தீங்கு நீங்கும் என்று உலகங் கூறுதலின் இங்ஙனங் கூறினாள்.

 

   செல்வன், ஈண்டுச் சீவகன். செய்யவள் - திருமகள். திருமகள் பலரிடத்தும் கைம்மாறிப் போதலின் பொதுமகள் எனப்பட்டாள். எனவே குலமகளாகிய யான் அவன் சிறை நீக்குதல் பழியாகாது எனத் துணிந்தவாறாயிற்று.

( 300 )
1151 ஆவதா கபுக ழும்புழி யும்மெழு நாளவை
தேவர்மாட் டும்முள மக்களு ளில்வழித் தோ்கலே
னோமெனெஞ் சம்மென நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன்
காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே.

   (இ - ள்.) புகழும் பழியும் ஆவதாக - (மேலும்) ஈண்டுப் புகழும் பழியும் ஆவதாகுக; அவை எழும் நாள் தேவர்மாட்டும் உள - அவை தோன்றும்போது விண்ணவரிடத்தும் தோன்றுகின்றன ; மக்களுள் இல்வழித் தேர்கலேன் - மக்களிடம் அவை இல்லாத இடத்தைக் கண்டறியேன் ; என் நெஞ்சம் நோம்-