பதுமையார் இலம்பகம் |
673 |
|
(வி - ம்.) பொன் அணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள்: இல் பொருளுவமை.
|
சல்லி பின்னிய முத்துமாலை எனக் கொள்க. பிணையல் - ஈண்டுத் தூங்கவிடப் பட்ட முத்தமாலை. இன்னிசைக்கூத்து - இனிய இசையோடு கூடிய கூத்து. திலகமன்னான் : சீவகன்.
|
( 5 ) |
1171 | இருமலர்க் குவளை யுண்க ணிமைப்பிலாப் பயத்தைப் பெற்ற |
| வரிமலர்த் தாரி னான்ற னழகுகண் டளிய வென்னாத் |
|
| திருமலர்க் கோதை யைம்பாற் றேவியர் தொடர்பு கேட்ப |
| வெரிமணிப் பூணி னானு மின்னண மியம்பி னானே. |
|
|
(இ - ள்.) திருமலர்க் கோதை ஐம் பால் தேவியர் - அழகிய மலர்மாலை அணிந்த கூந்தலையுடைய மனைவியர்; இரு மலர்க் குவளை உண்கண் - கரிய குவளை மலரனைய எம் மைதீட்டிய கண்கள்; அரி மலர்த்தாரினான் தன் அழகு கண்டு - வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையினானுடைய அழகினைக் கண்டு; இமைப்பு இலாப் பயத்தைப் பெற்ற . - (இதுவரை) இமையாமல் இருந்த பயனைப் பெற்றன; அளிய என்னா - அளிக்கத் தக்கன என்று முகமன் உரைத்து; தொடர்பு கேட்ப - எங்ஙனம் நட்புண்டாயதென்று வினவ; எரி மணிப் பூணினானும் இன்னணம் இயம்பினான் - ஒளி விடும் மணிக்கலன்கள் அணிந்த சுதஞ்சணனும் இவ்வாறு கூறினான்.
|
(வி - ம்.) இருமை. கருமை - நாய்ப் பிறப்பை மறையாமற் கூறலின் 'இன்னணம்' என்றார்.
|
இருங்குவளைமலர் போன்ற உண்கண் என்க. வித்தியாதரர் ஆகலின் கண்ணிமையாதிருந்தன. இதுகாறும் அவை வாளா இமையாதிருந்தன. இமையாமல் நோக்கி மகிழ்தற்குரிய இவன் அழகினை அவை இப்பொழுது இடையறாது நுகர்தலின் இமையாமையின் பயனையும் இப்பொழுது எய்தின என்றவாறு. தொடர்பு - நட்பு. பூணினான் : சுதஞ்சணன்.
|
( 6 ) |
வேறு
|
1172 |
பிணிக்குலத் தகவயிற் பிறந்த நோய்கெடுத் |
|
தணித்தகை யுடம்பெனக் கருளி நோக்கினான் |
|
கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன் |
|
மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினான். |
|
(இ - ள்.) மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான் - மாணிக்கக் கலத்தில் ஏந்திய அமிர்தம் போன்ற தகவினானான சுதஞ்சணன்; கணிப்பு அருங்குணத் தொகைக் காளை - அளவிடற்கரிய பண்பினையுடைய சீவகன்; பிணிக் குலத்து அகவை
|