பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 71 

பொழுது சிந்துகின்ற) பொற்றுகளோடு; கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவினது ஒருபால் - மணங்கமழும் மலர்த்துகளும் கலந்த பொலிவுடையது ஒரு பக்கம்.

 

   (வி - ம்.) விளியெனினும் சீழ்க்கையெனினும் வீளையெனினும் ஒக்கும். காய்த்துறு - காய்ச்சலுற்ற.

( 91 )
121 மைந்தரொ டூடிய மகளிரை யிளையவ
ரந்துகில் பற்றலின் காசரிந் தணிகிளர்
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின்னணிந்
திந்திர திருவிவி னெழிலின தொருபால்.

   (இ - ள்.) மைந்தரொடு ஊடிய மகளிரை இளையவர் அம்துகில் பற்றலின் - கணவருடன் பிணங்கிய மகளிரின் அழகிய துகிலை அக்கணவர் பற்றும்போது; காசு அரிந்து அணிகிளர் சுந்தர நிலமிசைச் சொரிதலின் - காசு கோவையற்று அழகிய நலம் நிறைந்த நிலத்தில் சிந்துதலின்; மின் அணிந்து இந்திர திருவிலின் எழிலினது ஒருபால் - ஒளிகொண்டு வானவில்லின் அழகினையுடையது ஒரு பக்கம்.

 

   (வி - ம்.) நிலமிசை என்பதனை 'நிலம் விசை' என்று நச்சினார்க்கினியர் பாடம் கொண்டனர் என்பது அவருரையான் விளங்கும்.

( 92 )
122 வளையறுத் தனையன வாலரி யமைபத
மளவறு நறுநெயொ டடுகறி யமைதுவை
விளைவமை தயிரொடு மிசைகுவிர் விரையுமி
னுளவணி கலமெனு முறையின தொருபால்.

   (இ - ள்.) வளைஅறுத் தளையன வால்அரி அமைபதம் - சங்கை நுண்ணிதாக அறுத்தாற்போன்ற வெள்ளிய அரிசியால் அமைத்த சோற்றையும்; அளவறு நறுநெய்யொடு அடுகறி - அளவற்ற நல்ல நெய்யாற் சமைத்த கறியையும்; விளைவு அமைதயிரொடு அமைதுவை - முற்றிய தயிரால் அமைத்த துவையினையும்; மிசைகுவிர் விரையுமின் - உண்பதற்கு விரைந்து செல்லுமின்; அணிகலம் உள எனும் உரையினது ஒருபால் - (உண்டபின் தருதற்கு) அணிகலன்களும் உள்ளன என்னும் மொழியினையுடையது ஒரு பக்கம்.

 

   (வி - ம்.) தயிரொடு : ஒடு : எண்ணுப்பொருளில் வந்த 'ஒடுவும் ஆம். 'வாலவிழும்' என்றும் பாடம்.

 

   அந்நகரத்து மக்கள் தம்மனையில் விருந்துண்போர்க்குக் கூலியும் கொடுக்கும் மாண்பினர் என்பது போதர 'உள அணிகலனும்' என்றார்.

( 93 )