| பதுமையார் இலம்பகம் |
714 |
|
| 1254 |
குழலெடுத் தியாத்து மட்டார் |
| |
கோதையிற் பொலிந்து மின்னு |
| |
மழலவிர் செம்பொற் பட்டங் |
| |
குண்டல மாரந் தாங்கி |
| |
நிழலவி ரல்குற் காசு |
| |
சிலம்பொடு சிலம்ப நீடோ |
| |
ளழகிகூத் தாடு கின்றா |
| |
ளரங்கின்மே லரம்பை யன்னாள். |
|
|
(இ - ள்.) அரம்பை அன்னாள் நீள்தோள் அழகி - வானவர் மகள் போன்றாளாகிய நீண்ட தோளையுடைய அழகியொருத்தி; குழல் எடுத்து யாத்து - கூந்தலை எடுத்துக் கட்டி; மட்டு ஆர் கோதையின் பொலிந்து - தேன் நிறைந்த மலர்மாலையாலே அழகு பெற்று; மின்னும் அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி - நெருப்பென ஒளிரும் செம்பொன்னாலான பட்டமும் குண்டலமும் ஆரமும் அணிந்து; அல்குல் நிழல் அவிர்காசு சிலம்பொடு சிலம்ப - அல்குல் மேலணிந்த மேகலைக்காசுடன் சிலம்பும் ஒலிக்க; அரங்கின் மேல் கூத்து ஆடுகின்றாள் - அரங்கின் மீது கூத்தாடுகின்றாள்.
|
|
(வி - ம்.) ”வாடிய வண்தளிர் அன்ன மேனி - ஆடியன் மகளிர் அமைதி கூறின் - நெறியின் நீங்கிய நெடிய ரல்லோர் - குறியிற் குறைந்த குறியர் அல்லோர் - பாற்கடல் இல்லாப் பருமை யில்லோர்” என்னும் சூத்திரத்திற் கூறிய நிலைகளுடனே ஆசிரியன் இட்ட அழகு கிடத்தலின், அழகி யென்றார்- என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 89 ) |
| 1255 |
தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயிலத் தண்பூங் |
| |
கண்ணொடு புருவங் கைகால் கலையல்கு னுசுப்புக் காம |
| |
ரொண்ணுதல் கொண்ட வாடற் றொட்டிமை யுருவ நோக்கி |
| |
வெண்ணெய்தீ யுற்ற வண்ணமாடவர் மெலிகின் றாரே |
|
|
(இ - ள்.) தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில - தண்ணுமையும் முழவமும் வீணையும் குழலும் ஒத்திசைக்க; தண்பூங் கண்ணொடு புருவம் கைகால் கலை அல்குல் நுசுப்புக் காமர் ஒண் நுதல் கொண்ட - தண்ணிய மலரனைய கண் முதலாக அழகிய ஒள்ளிய நுதலாள் கொண்ட; ஆடல் தொட்டிமை
|