| பதுமையார் இலம்பகம் |
728 |
|
| 1278 |
கையொடு கண்டங் கோப்பார் கனைசுட ருறுப்பின் வைப்பார் |
| |
தெய்வதம் பரவி யெல்லாத் திசைதொறுந் தொழுது நிற்பா |
| |
ருய்வகை யின்றி யின்னே யுலகுடன் கவிழு மென்பார் |
| |
மையலங் கோயின் மாக்கண் மடைதிறந் திட்ட தொத்தார். |
|
|
(இ - ள்.) கையொடு கண்டம் கோப்பார் - கையையும் கண்டத்தையும் தடைமரத்தைக் கோப்பார்; கனைசுடர் உறுப்பின் வைப்பார் - உறுப்புக்களிலே விளக்கெரிப்பார்; தெய்வதம் பரவி எல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்- தெய்வங்களைப் போற்றி எல்லாத் திக்கினும் வணங்கி நிற்பார்; உய்வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார் - இதனால் அரசன் பிழைக்க வழியின்றேல் உலகும் இன்னே கவிழும் என்பார்; மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார் - (இங்ஙனம்) மயக்கத்தையுடைய அரண்மனை மக்கள் ஆரவாரத்தினாலே மடைதிறந்த தன்மையை ஒத்திருந்தனர்.
|
|
(வி - ம்.) மக்கட்குரிய மனன் இன்றி அறிவு கெட்டமையின், ஐயறிவுடையரென்று, 'மாக்கள்' என்றார்.
|
( 113 ) |
| 1279 |
வெந்தெரி செம்பொற் பூவும் |
| |
விளங்குபொன் னூலும் பெற்றார் |
| |
மந்திர மறையும் வல்லா |
| |
ரெழாயிரர் மறுவில் வாய்மை |
| |
யந்தரத் தறுவை வைப்பா |
| |
ரந்தண ரங்கை கொட்டிப் |
| |
பைந்தொடிப் பாவை யின்னே |
| |
பரிவொழிந் தெழுக வென்பார். |
|
|
(இ - ள்.) வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார் - தீயில் வெந்து விளங்கும் பொன்மலரும் ஒளிரும் பொன்னூலும் பெற்றவர்களாய்; மந்திரம் மறையும் வல்லார் - மந்திரமும் மறையும் வல்லவர்களாய்; மறுஇல் வாய்மை அந்தரத்து அறுவை வைப்பார் - குற்றம் அற்ற மந்திரத்தாலே வானிலே ஆடையை நிறுவுவார்களாய் உள்ள; எழாயிரர் அந்தணர் - ஏழாயிரவராகிய அந்தணர்கள்; அங்கை கொட்டி - கையைத் தட்டி; பைந்தொடிப் பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக
|