பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 729 

என்பார் - பைந்தொடி யணிந்த பாவையனையாள் இப்பொழுதே வருத்தம் நீங்கி எழுக என்பார்.

   (வி - ம்.) பொற்பூவும் பொற்பூணூலும் அத்தொழிற் றிறமுடையார் என்பதற்குப் பெற்ற சிறப்புக்கள் என்க. மந்திரமும் எனற்பால உம்மை தொக்கது. வாய்மை மந்திரத்திற்கு ஆகுபெயர். அறுவை - புடைவை. பாவை : பதுமை.

( 114 )
1280 பாம்பெழப் பாம்பு கொண்டாற் பகவற்கு மரிது தீர்த்த
றேம்பிழி கோதைக் கின்று பிறந்தநா டெளிமி னென்று
காம்பழி பிச்ச மாகக் கணியெடுத் துரைப்பக் கல்லென்
றூம்பழி குளத்திற் கண்ணீர் துகணிலத் திழிந்த தன்றே.

   (இ - ள்.) பாம்பு எழப் பாம்பு கொண்டால் பகவற்கும் தீர்த்தல் அரிது - இராகு என்னும் பாம்பு ஞாயிற்றை மறைக்கும் பொழுது பாம்பு தீண்டில் இறைவனுக்கும் அதனைத் தீர்த்தல் அருமை; தேன்பிழி கோதைக்குப் பிறந்த நாள் இன்று - தேன் பிழியும் கோதையாளுக்குப் பாம்பு எழப் பாம்பு கொண்டதும் இல்லை, பாம்பு தீண்டுகின்ற காலத்துப் பிறந்த நாம் இல்லை ; காம்பு அழிபிச்சமாகத் தெளிமின் என்று - உதய ஆரூடக் கவிப்புகளிற் கவிப்பாக ஆராய்ந்து தெளியுங்கோள் என்று; கணி எடுத்து உரைப்ப - கணிநூலை யெடுத்துக் கூறக்கேட்டு; கல்லென் தூம்புஅழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது - கல்லென்னும் ஒலியுடன் மடையுடைந்த குளம்போலக் கண்ணீரானது புழுதியையுடைய நிலமிசை பெருகிற்று.

   (வி - ம்.) இன்று : எதிர்மறை வினைக்குறிப்பு முற்று. பிச்சம் - பீலிக் குடை. காம்பு அழிபிச்சம் - காம்பு இல்லத பீலிக்குடை. ஞாயிற்றின் விமானம் பீலியாற் செய்யப்படுதலின், அதனைப் பீலியாற் செய்யப்படும் பிச்சம் என்றார். எனவே, ஞாயிறு நடுவே கவிப்பாக நின்றது என்றவாறாயிற்று. இதனாற் பயன் : 'அக் காலத்துத் தெய்வம் மாயோன் ஆதலின், அவன் கருடனுடனே உலகைப்பார்க்கின்றதால், அக்கருடன் பார்வையால் நஞ்சு நீங்குதலாம்' என்பர் நச்சினார்க்கினியர்.

( 115 )
1281 நங்கைக்கின் றிறத்த லில்லை
   நரபதி நீயுங் கேண்மோ
கொங்கலர் கோங்கி னெற்றிக்
   குவிமுகிழ் முகட்டி னங்கட்
டங்குதே னரவ யாழிற்
  றானிருந் தாந்தை பாடு
மிங்குநம் மிடரைத் தீர்ப்பா
   னிளையவ னுளன்மற் றென்றான்